21

ஆறாவது

உற்பலாங்கி பதியை யடைந்த சருக்கம்

567 தற்பரத்துடன் றிகழ்சவுனகப்பெயர்

முற்றுணரருந்தவமுநிவகேட்டியாற்

சொற்றிடற்கரும்பரிசுத்தமேவிய

நற்கதைதன்னையாநவிற்றுவாமரோ

568 இம்மைநற்றவமுழந்தெம்பிரானிடத்

தம்மைதன்னடியிணையருச்சித்தேத்தியோர்

கொம்மைசேர்வரிமுலைக்கோதில்கொம்பனாள்

கைம்மைநீக்கியமணிகன்னிகைப்புனல்

569 முன்னருந்தவம்பலமுற்றியன்னனைதன்

பொன்னடிக்கமலத்திற்பூசையாற்றிய

வன்னவள்காதையையறைதிசூதநீ

யென்னலுங்கேண்மினோவென்றியம்புவான்

570 துங்கபத்திரையெனுந்தூநதிக்கரை

தங்கியபுண்ணியகிராமந்தன்னில்வாழ்

பங்கயனனையகோபாலனென்றொரு

துங்கவேதியன்மறைக்குலத்திற்றோன்றினாள்

571 அன்னவன்றன்னிடத்தவதரித்ததோர்

கன்னிமான்கன்னல்வேள்கணைக்கிலக்கனாள்

பொன்னுலகத்தினிற்புலவர்போற்றிட

மன்னியவுலகினில்வந்துதோன்றினாள்

572 முந்தைநாளிவளுறின்முகில்வணன்கடற்

செந்திருமாதினைச் சிந்தைகொண்டிடா

னந்துநான்முகனுநாமாதைநண்ணிடா

னிந்திரன்வேண்டிலனிந்திராணியை

573 கற்பகஞ்சேர்தருகாமவல்லியோ

கொற்றவில்வேளையாட்கொள்ளுந்தெய்வமோ

வெற்றியந்தணன்புரிமெய்த்தவங்கொலோ

மற்றவடன்னையான்மதிக்கற்பாலதோ

574 நிறையிருட்சைவலநீலமாமுகில்

குறைவில்சீர்க்கொன்றையின்கோலந்தாங்கியே

பிறையொடுபெருந்திருப்பிறங்கன்மேலணிந்

தறல்விரிபாளைசேரளகபந்தியாள்

575 கொம்மைசேரமுதநற்கோதிலாக்குளிர்

செம்மதிபோன்றொளிர்திருமுகத்தினாள்

வெம்மைநீடியபுகழ்வேனில்வேடிருக்

கைம்மிகுஞ்சிலைநுதற்கவினிலங்குவாள்

576 தாமநற்றாழ்குழைதந்தபொற்புறு

மாமணியூசல்போல்வயங்குகாதினாள்

காமசங்கீதமேகலந்தகாமனூற்

பாமணமொழுகுசெம்பவளவாயினாள்

577 சேயுயர்விசும்புறுதிங்கள்போன்றொளிர்

வேயுறுநித்திலம்விளங்குமூரலாண்

மாயவனேந்தியவண்ணவால்வளை

யாயகந்தரத்தினிலமைந்தபூணினாள்

578 இனமிகுகயற்கண்மூண்டிகல்செய்யாமலே

துனிவழியடைத்துநேர்துலங்குதுண்டத்தாள்

புனமுறுபசுக்கழைபொருந்துகின்றதோட்

கனவளைதாங்கியகாந்தடகையினாள்

579 கோதில்பூவணத்தினுங்கும்பகோணத்துங்

காதல்கூர்விண்ணவர்கரந்துதாங்கொணர்ந்

தாதிகாலந்தருமமுதகும்பழிப்

போதுசேர்ந்தனவெனப் பொலிந்தகொங்கையாள்

580 தூமணிகன்னிகைச்சுழிகொளுந்திமேன்

மாமணிவயிற்றுறுமயிரொழுங்கினாள்

காமருசிறப்புறுகலைவல்லோர்களு

மாமதியாலறிவருமருங்குலாள்

581 ஆர்ந்தமாமணிதிகழம்பொன்மேகலை

பாந்தளின்றொகுபணம்பரிந்தவல்குலாள்

வார்ந்தநெட்டிலையொடுவயங்குபூங்குலை

சார்ந்திடுமரம்பைநேர்தருகுறங்கினாள்

582 கருதரியதாயகற்கடகந்தன்னைநேர்

தருமழகியமுழந்தாள்வயங்குவாள்

கிருதமாலையில்விளையாடுகின்றநற்

றிருமிகுமணிவரால்சேர்ந்தகாலினாள்

583 எண்ர்வமேயமுமிசைக்கநின்றெதிர்

நண்ர்வமானமுநடுவினாவினேர்

கண்ர்றநிறப்பவேள்கருத்தமைத்துடன்

பண்ணியபொற்றராசெனும்பாட்டினாள்

584 இரதிகாந்தன்கலையெழுதுபுத்தக

மருவியவிருபுறவடிவயங்குவா

ளருளுடனுரியபேடாடல்கொண்டிடும்

பரிபுரவொலிமிகுபதாம்புயத்தினாள்

585 நாதவேதம்பயினற்குலாதிப

காதல்கூரின்பநற்கற்பின்மேதகு

மாதராண்மலர்தலையுலகமாண்புற

வோதுமுற்பலாங்கியென்றுரைக்கும்பேரினாள்

586 இந்தநல்லுலகினர்யாருமேத்திடச்

சுந்தரமெய்யினிற்றுலங்கிநாட்குநா

ளந்தநன்மடநடையன்னமன்னவள்

சந்திரகலையெனத்தான்வளர்ந்தனள்

587 பங்கமோடன்னவட்பயந்துளோர்கடாந்

தொக்கிருந்துளங்களிதுளங்கவோர்நனாண்

மைக்கருங்கண்ணியைமாமணஞ்செயத்

தக்கவர்யாரெனத்தம்மிற்றேர்ந்தனர்

588 இன்னணந்தம்முளத்தெண்ணியெண்ணியே

யன்னவரிருவருமாயுங்காலையிற்

றன்னிகரந்தணனொருவன்றான்மகிழ்

மன்னியமணிக்கடைவாயில்சார்ந்தனன்

589 மன்றல்செய்விருப்புடைமறைவலாளன்முன்

சென்றவன்சொன்றியீகென்றுசெப்பலு

நன்றசேரெழிலினைநாடித்தேவனென்

றொன்றியவுள்ளநின்றூசலாடினான்

590 பழகியநான்மறைபயிலுமந்தண

னழிவிலாப்பெருந்திருவழகுங்கோலமுங்

குழலுடன்யாவையுங்குறிப்பிற்கண்ர்றீஇக்

கழிபெருங்காதலான்கழறன்மேயினான்

591 மேவினையாரைநீமிக்கவன்புகூர்

யாவனின்றந்தையெங்கேகுகிற்றியென்

பாவையுமன்னமும்பரிந்துநல்குவேன்

மாவிரதீயுரைவழங்குகென்னவே

592 என்னலுமதற்கிசைந்தின்சொல்வாய்மையாற்

கன்னிசேருவகையங்கடற்குளித்தனன்

றன்னுணர்விழந்துரைதளர்ந்துதேறினன்

பின்னருந்தன்னுடன் பேசலுற்றனன்

593 மங்கலமவுட்கலியவிப்பிரன்றரு

திங்கள்போற்கலைமதிசேர்ந்தமைந்தன்யான்

றங்கியபிரமநற்சரியம்பூண்டுளேன்

பொங்குமாதவம்பலபுரியும்புந்தியேன்

594 அருமறையங்கமோராறுமாய்ந்துளேன்

குருவருளுடைமையேன்கோதினின்மகட்

டருதியேலென்கையிற்றகுவதாமென

வுரியமோனத்துடனுற்றிருந்தனன்

595 ஆங்கவன்மோனமோடிருந்தகாலையிற்

றாங்கரும்விருப்புடன்சார்ந்துதன்மனை

வாங்குவினுதலியைவரவழைத்தனன்

பாங்குடையந்தணன்பகர்தலுற்றனன்

596 நம்பெருந்தவத்தினானமதுகற்பகக்

கொம்பினைமணஞ்செய்வான்குறித்தொரந்தண

னிம்பரினடைந்தனனிருக்கின்றானென

வம்புலாமுலையவண்மகிழ்ந்துவாழ்த்தினாள்

597 அங்கதுபோழ்தினினரியகேதனந்

தங்குபூம்பந்தர்கள்சமைத்துச்சார்ந்தநற்

பங்கமில்பல்லியந்துவைப்பப்பாவைதன்

மங்கலமணவணிமரபினாற்றினார்

598 அறுசுவையடிசிலந்தணர்கட்காற்றியே

மறைவழிமணமகன்மலர்ப்பதங்கழீஇ

யறையிருகரங்களினளிக்கமாதொடுங்

குறைவில்சீர்மனைமிசைக்கொண்டுசேர்த்தினார்

599 தாவில்சீர்க்கன்னிகாதானநல்குவான்

காவிசேர்தடங்கணாள்காண்டகப்புனல்

பூவுறழ்செங்கையிற்புகாமுனன்குயிர்

மேவியமணமகன்வியோகமாயினான்

600 ஆண்டகையுயிர்பிரிந்தவனிசேர்தலு

மாண்டனனென்றுநன்மாதர்மைந்தர்கள்

காண்டலுநடுங்கிமெய்கலங்கியேங்கியே

யேண்டகவெடுத்தணைத்தினிதியம்பினார்

601 பொற்கொடிமடந்தையிப்போதுபாக்கியம்

பெற்றிலளென்றுதாம்பேசிப்பன்முறை

மற்றவட்புல்லியேவாய்புலம்பிநின்

றற்புதமெய்தினராற்றுகின்றனர்

602 அந்தணன்மணப்பிரேதத்தையன்பினான்

முந்தைநூல்விதிவழிமுறையிற்கொண்டுதான்

றந்திடுமந்தியச்சடங்கிழைத்தபின்

வந்தனர்தம்பதிவழிக்கொண்டேகினார்

603 பளபளத்திளகிநற்படீரகுங்குமக்

களபமுங்கியமுலைக்காமர்கன்னியுந்

தளரிடையன்னையுந்தந்தையும்பெருங்

கிளைஞருநெஞ்சகங்கிலேசமுற்றனர்

604 பின்னர்முத்திங்கடான்பெயர்ந்துசெல்லவக்

கன்னியைமணஞ்செய்வான்கருதிச்சேர்ந்தரோ

வன்னவந்தணனுநீரங்கைதாங்குமுன்

றென்னிலைசேருயிர்துறந்துபோயினான்

605 மங்கையர்க்கரசியைமாமணஞ்செய்வான்

றுங்கமோடணைகுநர்தம்மைத்தூக்கினோர்

பங்கமிலாதநற்பத்திரட்டியோர்

தங்களாருயிர்தனைத்தணந்துபோயினார்

606 மற்றவள்பொருட்டிவர்மாய்ந்தபின்னரே

பெற்றருளன்னையும்பிறங்குதாதையும்

வெற்றுடம்பாகவிண்விரைந்துபோயினார்

பொற்றொடிதான்றனிபுலம்பிவைகினாள்

607 நீடியகிளைஞரானிந்தையுற்றனள்

கூடியேயணைதருகொழுநர்க்கூட்டிடும்

பீடுறும்பெரும்புனற்பிறங்குநற்றலந்

தேடியேயெண்டிசாமுகமுஞ்சென்றனள்

608 ஓதுநல்லுண்டியுமுறக்கமுங்கடிந்

தேதமிறீர்த்தங்களெங்குமாடியே

போதவிழ்பொழிறிகழ்பூவணந்தனிற்

காதலினடைந்தனள்காமர்கன்னிகை

609 படர்ந்தெரியுமிழ்கொடும்பாலைசேர்நில

நடந்திடும்வெம்மையானன்புனற்றரு

தடந்தெரிகுற்றதிதாகமோடுறா

வடந்திகழ்பூண்முலைமடந்தைகண்டனள்

610 பண்டருமறையவர்பன்னசாலையும்

புண்டரீகச்செழும்பொய்கையும்புக

ழெண்டகுமிருந்தவரியைந்திலங்குபூந்

தண்டலைசூழ்மணிகுண்டந்தன்னையே

611 வெள்ளிடைவெயிலின்மெய்வெதும்பிவேர்வர

வுள்ளநொந்தடிபெயர்த்தியங்கியேயுராய்த்

தெள்ளுதீம்புனன்மிகப்பருகித்தேக்கியே

யள்ளனீர்த்தடங்குடைந்தாடினாளரோ

612 தடமடுமூழ்கியதபோபலத்தினா

னிடைவிழுநாளறவிருந்தவம்புரி

தொடர்வுறுமருள்விடுசோதிதுன்றுமெய்

முடிவறுகாலவமுநியைக்கண்டனள்

613 பன்னிருகான்முறைபடிபஞ்சாங்கமாய்

மன்னியபொன்னடிவணங்கிவீழ்ந்தெழீஇ

யன்னவள்கழறலோடர்கலின்றியே

நின்னருள்புரியெனநேர்நின்றாளரோ

614 சின்மயமாகியசிவானுபூதிசேர்ந்

தந்நிலைதிரிந்தவனன்னமென்னடைக்

கன்னிகைதன்னைநேர்கடைக்கண்டாக்கியே

முன்னுறுகாதலான்முநிவன்கூறுவான்

615 சீர்மிகுமாதராய்சேர்கநன்குநீ

யார்கொலோவெங்கிருந்தேகுகிற்றியா

னேர்தருகணவன்யார்நிற்பயந்தவன்

பேரெதிங்கடைந்ததென்பேசுவாயென்றான்

616 அகங்குதுகலிப்பவேயரியமாதவன்

மிகுந்தபேரன்புடன்விளம்பக்கேட்டுள

மகிழ்ந்தனள்பாக்கியவதியும்யானெனாத்

திகழ்ந்தசெம்பவளவாய்திறந்துசொல்லுவாள்

வேறு

617 செடுங்காலந்தவமுழந்துநீள்சடையோனருள்படைத்துநீண்டபார்மேற்

படர்ந்தேறும்பல்புகழ்சேர்பங்கயனையனையதவப்படிவமென்னா

வுடன்சேருமுயிர்த்துணைவருயிர்துறந்துமுயிர்சுமந்திங்குழலுமிக்க

கொடும்பாவியெனதுநிலைகூறரிதாயினுஞ்சிறிதுகூறக்கேண்மோ

618 தொன்மறையோர்புகழ்ந்தேத்துந்துங்கபத்திரையெனுமோர்தூநதிப்பான்

மன்னுமதன்கரையின்கண்மருவுபுண்ணியகிராமத்துவாழ்வோன்

கொன்னவிலந்தணர்கோமான்கோபாலன்றந்தகுலக்கொடியேனானே

யிந்நிலத்திற்பிறந்தவன்றேயெல்லோருமேசுதற்கிங்கிலக்காய்நின்றேன்

619 இங்கதுவுமிசைக்குவன்கேளெனையளிப்பவெனைப்பயந்தவெந்தையந்தோ

மங்கலமாமறைவிதியின்மணவாளர்செங்கையினின்வழங்கும்வேலைத்

துங்கமுறுமைந்நான்குதுணைவராருயிர்துறந்துதுறக்கஞ்சேர்ந்தா

ரங்கதனாலடியேனுமருங்கணவற்பெறவேண்டியடைந்திட்டேனால்

620 முன்னைவினையின்பயனோவிம்மையில்யான்செய்தபவமூண்டதேயோ

கன்னியெனப்பேர்படைத்துங்கலங்கழிந்தகாரிகைபோற்கலங்காநின்றேன்

றன்னிகராகின்றவெழிறாங்குமடமங்கையர்கடங்கண்முன்ன

ரென்னேயோவென்னேயோவின்னமும்யானுயிர்சுமந்திங்கிருக்கிறேனால்

621 மிக்கார்வத்துடன்கௌரிவிரதமநுட்டித்துமுன்னைவிதியினாலே

யெக்காலுமிழைத்திடுமுத்தியாபனநீயிழப்பவிமூதியைந்ததென்று

முக்காலமுதலியனமுறையானேமுற்றறிந்துமொழியுமந்தத்

தக்கார்கொளம்முநிவன்ஞானக்கண்ணாலுணர்ந்துசாற்றினானே

622 அலர்கதிர்வெய்யோன்றீர்த்தத்தங்கணன்றனருளதனலாடலாலே

நிலவலயந்தனிற்செய்தநீண்டகொடும்பாதகமுநீங்காநின்று

மலிபுகழ்சேரித்தீர்த்தமான்மியத்தினான்மிகுமங்கலமுமாகு

முலகமெலாம்பணிந்தேத்தவுயர்தவநீபுரியும்வகையுரைப்பக்கேண்மோ

623 பைந்தடஞ்சேர்தருமுட்டாட்பங்கயப்பொற்பூவினொடுற்பலங்கைக்கொண்டு

மந்திரதந்திரம்பொருந்தவாலுகவேதிகைசதுரம்வகுத்தமைத்தே

யந்தரியையாவாகித்தக்கற்பவிதிபூசையாற்றினின்பாற்

சுந்தரிநேர்வந்துநிற்பொற்சுமங்கலியந்தந்தருளுஞ்சுடர்வேற்கண்ணாய்

624 என்றுமுநிவரனிசைப்பவேந்திழைநலிருங்கணவற்பெறுவான்வேண்டி

நன்றிதெனமிகழ்ந்தந்தநன்முநிவனாச்சிரமநர்கிப்பாங்கா

லொன்றியவன்புடன்விதிநின்றுமையாடன்றிருநோன்பையுவந்துநோற்றே

யன்றுடனுத்தியாபனஞ்செய்தருங்கணவன்றனையருளினடைந்தாளன்றே

625 இத்தகையதீர்த்தத்தினினிதாடவிடர்ப்பிறவிக்கடற்படாவே

யுத்தமநற்குலத்தினல்வந்துற்பவித்தவுலகமெலாமுவப்பினாலே

நித்திலத்தையொத்தநகைநேரிழைதன்வைதவ்வியநீக்கலாலே

பத்தியுடன்மடவாரும்படிந்தாடக்கடவர்தினம்பரிவிற்பாங்கால்

வேறு

626 இடபநல்லிரவிதன்னிலெழிறருமிந்துவாரத்

துடனிகழ்நடுநாளந்தவோடையினாடிமன்னுங்

கடனுறுமிக்ககாமக்கலங்கழிமகளிரானோர்

தொடர்பினால்வருபிறப்பிற்சுமங்கலியாகிவாழ்வார்

627 கோதின்மங்கலையாய்க்காதற்கொழுநரைக்கூடுகின்ற

மாதராரந்நீராடின்மகிழ்தருமகப்பேறுண்டாங்

காதலிற்கலந்துகாமர்கன்னியர்கணவற்சேர்வார்

மேதகுத்தியாபனத்தால்விரதநற்பலங்களுண்டாம்

வேறு

628 அற்பினோங்குசீரரனடிக்கண்வாழற்புதந்தருமருடவத்தினா

னுற்பலாங்கிதன்கதைபடித்துளோருய்த்துணர்ந்துதஞ்செவிவழிக்கொள்வோர்

கற்குமாண்பினோர்கலியகத்தரோகட்டவெங்கொடும்பவமகற்றியே

மற்றையாண்டையோர்வளமைபெற்றுமேல்வைத்திடுங்கதிமருவுகிற்பரே

உற்பலாங்கி பதியையடைந்த சருக்க முற்றியது

ஆகச்செய்யுள் 628

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book