23

எட்டாவது

சர்வபாவமோசனச்சருக்கம்

658 சுத்தமாம்புராணந்தேர்ந்தசூதநன்மாதவத்தோய்

சித்திரமணிகுண்டத்திறிசைமுகன்றீர்த்தந்தன்னிற்

பத்தியினடைந்தியாரும்படிந்திடுகாலபேத

மித்திறனன்மாதோவிசைக்குவதின்னுமுண்டால்

659 பல்பவமகற்றுந்தானம்பண்ணிடுங்காலம்பாங்காற்

றொல்லைநூல்விதிவழாமற்றொடங்கிடுஞ்சாந்தியன்றி

மல்லலோங்கெழில்சேர்தீர்த்தமாடவல்வினைகண்மாய்க்கு

மெல்லையில்பலங்கடம்மையெடுத்துநன்கியம்புகென்றான்

660 மோனஞானந்தெரிந்தமுழுதுலகிறைஞ்சியேத்த

லானவானந்தவெள்ளத்தழுந்திடுமந்தணாள

வூனமதகலச்செய்திங்குரைக்குவமோர்கவென்னாத்

தானருள்கூர்ந்தசூதன்சவுனகற்குரைப்பதானான்

661 மேடநற்றிங்கடன்னின்மிக்கபுரணையினன்பாற்

கூடியமவுனத்தோடுவடுகனைப்பணிந்துகொன்றை

சூடியகடவுடன்னைத்தொழுதிராக்கடையில்விண்ணோர்

தேடருமணிகுண்டத்திற்சேர்ந்தவர்பலத்தைச் சொல்வாம்

662 வேதியற்கோறலாதிவெங்கொடும்பாவமாயப்

பாதகமனைத்துமங்ஙன்பாறிடும்பரிவின்முன்ன

மோதிடுமந்தநாளினொளிகிளர்மணிகுண்டத்தி

னேதமிலந்நீர்மூழ்கினின்பமாமுத்திசேர்வார்

663 அக்கிநிட்டோமமாதியரியநல்வேள்வியாற்ற

மிக்கசெம்பொன்கொடுத்தோர்மேவியபலன்களுண்டாம்

பக்கமோடரிதினேனும்பகர்ந்திடுமந்தநாளிற்

றெக்கசீர்மணிகுண்டஞ்சேர்தோயத்திற்றோயமாதோ

664 கடுங்கொடுங்குட்ட நோயன்களத்துரோமத்தன்மிக்க

கொடும்பிணியாளனந்நீர்குடித்திடனொளிக்கும்வெந்நோய்

திடம்படுமிடபமன்னுந்திங்களிற்சௌம்யவாரத்

தடைந்ததின்மூழ்கிற்செம்பொனரும்பெருங்களவுநீங்கும்

665 இந்த நீர்மணிகுண்டத்தினின் புறக்கருதியன்பாற்

புந்திகன்றனக்குப்புந்திபொருந்திடப் பொலங்கொள்பைம்பொன்

வந்துநன்கியைந்ததானமகிழ்ச்சியின் வழங்கினோர்கட்

கந்தகன்றன்னைக்காண்டலருந்தண்டமிரண்டுமின்றாம்

666 மன்னியமைந்தரானோர்வைகாசிவிசாகந்தன்னிற்

பன்னுநான்மறையோர்கையிற்பரவுதன்பிதிர்கடம்பாற்

றுன்றுவெம்பசிதணிப்பான்றூயவெட்டயிர்பான்மாடந்

தன்னிகர்குளந்தயங்குந்தக்கசித்ரான்னத்தோடும்

667 அரியனபொருளினட்டவறுசுவையுண்டிமிக்க

பரிமளஞ்சுகந்தநன்பூப்பாதுகைகுடைபூணாதி

யுரிமையினுலோபியாதங்குதவிடிற்பிதிர்கள்வான்றோ

யிரவிவெண்மதிநாட்காறுமின்பத்தினியைவரன்றே

668 தந்தைதாய்வர்க்கத்தோடுந்தகும்பெருங்கிளைஞரோடுஞ்

சுந்தரந்துதைந்திலங்குந்தூயநல்விமானநூறு

முந்துறவந்துசூழமுடுகியேகடிதினேகி

யெந்தைசேர்கயிலைவெற்பினிடத்தினிதமர்வரன்றே

669 தன்னிகர்மாகத்திங்கடக்கமந்திரிசிங்கத்தின்

மன்னுமாமாகந்தன்னின்மாமணியோடைசேர்ந்த

வன்னதீர்த்தத்தினாடியரும்பெருந்தானமீவோர்

பன்னரும்பவங்கள்யாவும்பற்றாத்துடைப்பரன்றே

670 தனைநிகர்தநுர்மாதத்திற்சதுர்முகன்றீர்த்தந்தன்னி

லினைதலொன்றின்றிநெஞ்சத்தினியதேநுவைவதைத்தோர்

மனமொழிமெய்களொன்றிமன்னொருமாதமூழ்கி

னனையதோர்காலையந்தவரும்பவமனைத்துநீங்கி

671 தக்கபன்மணிப்பதாகைத்தவளநல்விமானத்தேறி

மிக்கசீர்விளங்குமந்தவிரிஞ்சனதுலகமெய்தித்

தொக்கசெம்மணிகள்வானிற்சுடரவன்வெயின்மறைத்தொண்

டிக்கிலகொளிபரப்புஞ்சித்திரமண்டபத்தில்

672 நிறைமதிபுரையுமந்தணித்திலக்கொத்துமாலை

முறைமுறைநிவந்தமாடமுகப்பினின்ஞாங்கர்த்தூங்கக்

குறைவறுசெம்பொற்சோதிகுலவுபூங்கொடிகளாட

மறுகுசேர்நிரைகடோறுமகரதோரணம்வயங்க

673 வேதநற்புராணமாதர்மிக்கவெண்டிக்குப்பால

ரோதுகந்தருவர்வீணையுயர்தவச்சநகராதி

யேதமின்முநிவர்போற்றவீரேழிந்திரர்கள்காலங்

கோதறவாழ்ந்துபின்னர்க்குவலயத்தரசராவார்

674 கார்த்திகைத்திங்கடன்னிற்கார்த்திகைநாளிற்றிங்கள்

சீர்த்திகழ்கலையீரெட்டுஞ்செறிந்தநாள்குறைந்தநாண்மெய்ந்

கீர்த்திகொள்க்ரகணகாலங்கெடுமதிதிங்கள்சேர்நா

ளார்த்தசுந்தரப்பொன்சேயிலருங்கலையொடுங்குமந்நாள்

675 வந்திடுமிவற்றையிந்தமலர்தலையுலகந்தன்னிற்

புந்திகொளறிவின்மிக்கோர்புட்கரயோகமென்ப

ரந்தநீர்மையினலோரொன்றாயிரங்க்ரகணமொக்குஞ்

சிந்தைகூர்ந்தந்நீராடிற்சிவபுரியதனிற்சேர்வார்

676 தவலருஞ்சிவநிசிக்கட்சந்நிதிமன்னுதீர்த்தத்

தவலமதகலவுன்னியாடியேயன்பின்மிக்க

புவனநன்கியாரும்போற்றும் பூவணங்கோயில்கொண்ட

சிவபிரான்றனைவில்வத்திற்சிறப்புடன்பூசைசெய்து

677 உவமனிலந்தநாளினுண்டியோடுறக்கநீத்துப்

பவமறப்புராணம்பன்னிற்பகர்சிவநிசியதொன்றா

னுவலிலந்நியதலத்தினூற்றொருகோடிகொண்ட

சிவநிசிவதியிற்பூசை செய்திடும்பலத்தைச்சேர்வார்

678 அச்சிவசிநிக்கணானைந்தரியபஞ்சாமுதத்தோ

டிச்சையாங்குசோதகம்மோடெட்டயிலாதிகொண்டு

நிச்சயமணிகுண்டத்தினீரினாட்டினர்பதத்தை

நச்செயிற்றநந்தனாலுநவிற்றநாவசைக்கவற்றோ

679 ஆயினுமரிதுவந்ததறைகுவனவர்சாலோக

மேயபின்சாரூபத்தின்மேவியேவிளங்குங்கார்த்தி

கேயனோடொத்தநந்திகேயனுக்கிணையதாகி

யோய்விலாயிரஞ்சதுர்நல்லுகஞ்சிவலோகத்தேய்வார்

680 செய்யவொண்பட்டினுாலுந்திகழ்ந்தவெண்பட்டினாலுந்

துய்யபூங்கதலிபூகமாதியதொங்கறன்னா

லைதிகழ்பூவணத்தெம்மடிகளையலங்கரித்தோர்

பையழகொழுகுந்துத்திப்பன்னகாபரணனாவார்

681 ஐம்பெரும்பாதகங்களகற்றிடுமஞ்செழுத்தை

யிம்பரினேன்றதீக்கைக்கீனனாயிருந்தானேனு

நண்பினான்வெறுப்புத்தன்னானவின்றிடினோர்கால்வானத்

தும்பரின்மேலாயன்னோனுறுபவமொழிப்பனன்றே

682 தேறிநன்கிருகாற்செப்பிற்றிகழ்திருக்கயிலைசேர்வா

னூறுடனெண்காலன்பினுவன்றிடில்வீடுசேர்வான்

மாறிலாச்சதவுருத்தரமந்திரஞ்செபிக்கின்மூழ்கிற்

கூறருநன்றிகொன்றகொடும்பவங்குலையுமன்றே

683 உருத்திரன்றனக்குமிக்கோங்கொளியுருத்திராக்கமாலை

யருத்தியினளித்தோரக்கவணிமணியொன்றினுக்குத்

திருத்தகுசிவலோகத்திற்றிகழ்தருவருடம்வாழ்ந்து

பரப்பிரமத்தைச் சேர்வர்படர்புவியிடத்துமன்னோ

684 எப்பொருளேனுமுள்ளத்தின்பமுற்றதனையன்பா

லப்பொருடன்னை மேலாமரன்றனக்காகவென்றே

தப்பறவளிப்போரிந்தத்தடங்கலுடுத்தபார்மே

லொப்பறவாழ்ந்துபின்னருயர்பரமுத்திசேர்வார்

685 ஓதுமிவ்வத்தியாயமுறுபவமொழிக்குமேலோர்

பூதலத்துபதேசஞ்செய்பொருடருசாரமாகுங்

காதலினோதுவோர்க்குக்கருதியதளிக்குமென்று

மேதகவிரைத்தவற்றைவேட்கையின்விளக்கக்கேட்போர்

686 மேதினியடத்தின்மேவுமிக்கதீர்த்தங்கள்யாவுங்

காதலிற்சென்றடைந்துகலந்தவைபடிந்தோராவர்

போதநன்குணர்ந்தமேலோர்புகன்றிடும்வேள்வியாவு

மாதரவதனாற்செய்தவரும்பலமடைவரன்றே

687 இந்தநற்பூவணத்தினினிதுவாழ்கிற்போர்தம்மை

யந்தரதேசநின்றுமடைந்தவரிவர்க்கண்டாங்கே

முந்துறுபவங்கடீர்ந்துமுத்தியையடைவரென்றாற்

புந்திகொண்டமர்வோர்வீடுபொருந்துதல்புகலல்வேண்டா

688 கூனலம்பிறைமிலைச்சுகோடீரபாரத்தெந்தை

யூனமிலுமையாள்கேட்பவுரைத்தருளுபதேசத்தை

யானதோர்காலைதன்னிலாறுமாமுகங்கொடுற்ற

ஞானவானதனைக்கேட்டுநந்திபானவிற்றான்மன்னோ

689 நந்திதான்கேட்டவற்றைநற்சநற்குமாரற்கோத

வந்தநற்சனற்குமாரனருள்வியாதற்குரைப்பச்

சுந்தரவியாதனெற்குத்தொகுத்துபதேசஞ்செய்ய

முந்துறக்கேட்டவற்றைமொழிந்தனனுமக்கியானே

690 நுண்ணியபொருளாய்மேலாய்நுவலருமுலகுக்கெல்லாம்

புண்ணியமளிக்குமிந்தப்பொருடனைவிரும்பிக்கேட்டோற்

குண்மகிழ்ந்துரைத்ததின்றீங்குமக்கியான்றொகுத்துரைத்தேன்

கண்ர்தற்பெருமான்றந்தகணிப்பருங்கருணையாலே

691 ஈதுமக்கிறைவன்ஞானமெய்துதற்கேதுவாகு

மாதலாலருண்மைந்தர்க்குமரியநன்மாணாக்கர்க்குங்

காதல்கூர்பவர்க்குமிந்தக்கருதருபுராணந்தன்னை

யோதுதியறிவின்மேலோயுடங்கியைந்தெந்தஞான்றும்

வேறு

692 அழகியமின்னன்னையெனுமானந்தவல்லியுடனமர்ந்துதோன்றுஞ்

செழுமலர்க்கொன்றையினறும்பூந்தேன்றுளிக்குஞ்செஞ்சடிலசேகரன்சேர்

பொழிறிகழ்பூவணக்காதைபுகல்பிரமகைவர்த்தபுராணந்தன்னி

னெழுதரியமறைமுநிவவீரெழுபத்ததாறாமத்தியாயமாகும்

வேறு

693 இந்தவத்தியாயம்படித்துளோரின்பமுற்றுநாளுஞ்செவிக்கொள்வோர்

சிந்தையிற்கொடேசெஞ்சொல்செப்புவோர் செங்கரத்தினானன்குதீட்டுவோர்

மைந்தர்பெற்றமாமைந்தர்சுற்றவேமங்கலத்தினான்மண்டலத்தில்வாழ்ந்

தந்தமற்றசீரண்டர்பொற்பினீடம்பொன்மிக்கவானங்கிருப்பரே

சர்வபாவமோசனச்சருக்கமுற்றியது

ஆகச்செய்யுள் 693

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book