35

இருபதாவது

சிதம்பரவுபதேசச்சருக்கம்

1350 தனைநிகரரியதவமொருவடிவாஞ்சதுர்மறைச்சவுனகவயன்மா

னினைவருஞ்சகளநிட்களவடிவாநிமலனானந்ததாண்டவத்தை

முனிதருதிமிரமுக்குறும்பெறிந்தமுனிவரர்க்கருளியமுறைமை

யினிதுகேளெனக்கட்கமல்நீர்பொழியவெடுத்தருட்சூதனாங்கிசைப்பான்

1351 மேவுநல்வேதவியாதனெண்வசிட்டன்மிக்கசீர்க்கவுதமன்வாம

தேவன்மார்க்கண்டனங்கிராத்திகழத்திரியதீதரன்சதானந்தன்

றாவில்பாரத்துவாசனக்கினிபன்சவுனகன்மவுனபாற்கரனோ

டோவறுமனையமுனிவர்மாணக்கருடன்மறைமுழுதுநன்கோதி

1352 தெரிவருஞ்சீர்மத்தியானகாலத்திற் றென்றிருப்பூவணந்தன்னி

னொருவருமுள்ளத்துணர்வுடன் றூங்கியுவந்தினிதுறைதருமதனாற்

புரையிகந்தோங்கும்புகழ்சதுர்வேதபுரமெனப்புகன்றிடுமுலக

மருள்பழுத்தின்பத்தழுந்துமாதவவிவ்வருந்தலப்பெருமையாரறிவார்

1353 அறையுமத்தலத்தின்முறைவியாதன்பாலருளுபதேசநன்கடைந்து

செறிசடாடவியிற்சிறுபிறைமுடித்தசிவபிரான்றன்னைநேர்நோக்கி

மறையினற்றுறைடோமாத்தியந்தினனுமருவியதியானகாட்டனுஞ்சீ

ருறுமுயர்நிலைசேரும்பராண்டொருநூறுரைக்கருந்தவமுழுந்தார்கள்

1354 கனைகதிர்தெறுநாட்கழறுமோரைந்துகனல்வளர்த்ததனிடைநின்று

நினைவருஞ்சீதநிகழ்ந்தகாலத்துநீர்நடுவாகியேநின்றுந்

துனியறுமுந்தித்தழற்சுழுமுனையாற்றுவாதசாந்தந்தனிற்சொலிப்ப

மனமகிழ்ந்தெங்கோன்மலைமகயோடுமழவிடைவந்துதோன்றினனால்

1355 குழகன்மால்விடைமேல்கொண்டுமுன்றோன்றிக்குறுகலுங்கோதிலாத்தவத்தோர்

விழுமநன்படிமேல்விழுந்தடிபணிந்துமெய்ம்மயிர்பொடித்திடவுள்ளந்

தழன்முகங்கண்டமெழுகெனவுருகிச்சதுர்மறைப்பாடலிற்றுதிப்பக்

கழைதருசிலைக்கைக்காமனைக்காய்ந்தகண்ர்தல்கருணைசெய்தருள்வான்

1356 மதிக்கரும்பெரியமாதவமுடித்தமாத்தியந்தினனையுநினைவிற்

கதித்திடுந்தியானகாட்டனாமுநிபுங்கவனையுங்களிப்புடன்கண்டு

விதிக்குநல்வரங்கள்வேண்டியதளிப்பபமேலினும்வேண்டுதிரென்னாத்

துதித்துவண்டினங்கடுவைத்திடுங்கமலத்துணைப்பதந்தொழுதிவைசொல்வார்

1357 அலகிலண்டங்கட்கருள்சுரந்தளிக்குமமலநீயருள்வடிவாகி

மலர்மயிலுறைபூவணநகர்மிகுமாமந்திரமானவைந்தெழுத்தை

நிலைபெறவெமக்குநிகழ்த்தியானந்தநிருத்தநீயளித்தருளென்னாக்

கலைமதிபுரட்டுங்கங்கையஞ்சடிலக்கண்ர்தற்பண்ணவன்கரைவான்

1358 மெய்த்தவம்புரிகான்மீரதீரத்தின்வேதநான்காதிநூல்வருணர்

சத்தியஞானதாண்டவங்காணத்தந்தருள்வாயெனமுந்தைச்

சித்திரகூடஞ்சேர்ந்திடுமெனவேசெப்பவாங்குற்றனாவரோ

டத்திலைவனத்திலானவானந்தவருணடங்குயிற்றிடல்காண்பீர்

1359 உரைத்திடினிந்தவுலகின்மேலாகியோதரிதாயநால்வேத

சிரப்பொருளாகித்திகழ்ந்திடுமிந்தத்திருவெழுத்தஞ்சினைச்சேர்த்து

விரித்தியாமிவணேமேவுபதேசம்விதிப்படிவிளம்பியானந்த

நிருத்தமாடுதுநுமுளக்கமலமதாநிகழ்திருவம்பலந்தன்னில்

1360 இந்தலமானந்தத்தலமாகுமிழைத்திடுந்தவமுடனெய்து

நித்தியானந்தந்தன்னைநெஞ்சகத்தினினைக்குநர்தமக்குநேர்விக்கும்

வைத்திடும்புகழான்மிக்குயர்ந்தோங்கும்வைரமொன்றின்றியேவைகுஞ்

சத்தியஞானதவத்தர்காளீதுசத்தியஞ்சத்தியமாமால்

1361 முதுசுவைதருமாரமுதவிந்துவிற்றான்முளைத்திடுஞ்சுரர்தருவொன்று

துதிபெறுகிரேதாயுகமதுமுன்னாச்சொற்றகுநான்குகந்தொறுமிப்

பதிதனிற்பாரிசாதமாலூரம்பன்னருமுயர்புகழ்வன்னி

திதமுறுசெம்பொற்சுனைக்குடக்கனிசேர்தீம்பலவாகியேதிகழும்

1362 தாதருகுடுத்தசோதிசேர்மடற்பூந்தகட்டுநற்றபனியப்பொகுட்டு

மேதகுகமலவேதன்மாலாதிவிண்ணவர்நண்ணரும்பரமப்

பாதலத்திடைநின்றெழுந்ததொர்தாபரமாய்ப்பழவடியார்க்கருள்பொழியுங்

காதல்கூர்தலம்போற்கழறுநாண்முன்பின்கருதருங்காட்சியின்மிகுமால்

1363 ஆதலினிந்தவரும்பிரணவமாமஞ்செழுத்தருளுபதேசந்

தீதறக்கொடுநீர்தில்லையிற்சேர்மின்செம்பொனம்பலந்தனில்யாமே

காதலினிருத்தங்காட்டுதுமிந்தக்காசிறென்பூவணக்காசி

யோதிடுமுபதேசத்துளநடனமுஞற்றுதன்மந்தணமாமால்

1364 செப்புறுமிந்தத்திருநகர்மேலாஞ்சிதம்பரமெனும்பெயர்திகழு

மொப்பிலாவிதனிலொருகணமேனுமுறைகுநர்க்கானந்தநிருத்த

மெய்ப்படஞானம்விளங்கிடவளிப்போமென்னலுமிகமகிழ்கூர்ந்து

தப்பிலாதுயர்ந்ததவமுயன்றரியசஞ்சிதவினையறுந்தவத்தோர்

1365 அற்புதத்துடனங்கடிபணிந்தேத்தியன்புடனங்கணன்றன்பா

லுற்பவந்துடைக்குமுற்றவஞ்செழுத்தினுரையுபதேசநன்குணர்ந்து

சொற்பதங்கடந்தசோதிதன்னருளாற்சுத்தமாமுளக்கமலத்திற்

சிற்பரானந்தத்திருநடங்கண்டுதென்றிருத்தில்லையிற்சென்றார்

1366 சிந்தையின்மகிழ்ந்ததிருமறைமுனிவர்தில்லையினெல்லையைச்சேர்ந்து. முந்துறக்கண்டுமூலகாரணமாய்முளைத்திடுமுதல்வனைமுறையாற்

புந்திகொண்டுரியபூசையும்புரிந்துபுலிபதஞ்சலியுடன்கூடிச்

சந்ததம்விளங்குந்தபனியப்பொதுவிற்றாண்டவங்காண்டகவிருந்தார்

1367 இத்தலமதனுக்கின்னுமோர்நாமமியம்பின்மாபாதகநாச

வுத்தமநாமமுற்றிடுமதனாலுமைதிருமாலயன்வெய்யோன்

வித்தகமுனிமார்க்கண்டனெண்டிசையோர்வேந்தரெண்குருகுலவேந்தர்

புத்தியும்பொருவின்முத்தியும்பொருந்தப்பூசனைபுரிந்தனர்மாதோ

1368 அன்றியுமுனிவரிராக்கதரசுரரானநன்முனிவர்களேனோர்

கன்றிடும்பவங்கள்கழித்துநன்கிட்டகாமியமளிக்குமித்தலத்திற்

கொன்றையஞ்சடிலக்குழகனையுள்ளங்கொண்டருச்சனைவிதிகண்டாங்

கொன்றியவன்பினுடன்பணிந்தேத்தியுத்தமமுத்தியினுற்றார்

1369 அங்கணனுடன்வாதாடிமாகாளியாடியதோடமதகலச்

சங்கரன்றனக்குத்தரதிசையிரண்டுசார்தருகூவிளிதூரத்

தெங்கர்ம்புகழ்காளீச்சுரலிங்கமினிதமைத்தருச்சனைசெய்து

வெங்கொடும்பவத்தைவேரறுத்திட்டமேன்மைமூவுலகினும்விளங்கும்

1370 பொருதிரைக்கடல்சூழ்புடவியிற்பூர்வம்பொருந்துமீரறுவருடஞ்சூழ்

வருகிரகங்கள்வக்கிரமுறலால்வான்முகின்மழைவறந்திடவே

தரைவளந்தணப்பச்சலந்தருவடிவச்சலந்தரன்றானொர்மண்டுகமா

யருமணங்கமழுமலர்தருமலரியடியினாங்கமர்ந்தினிதிருந்தான்

1371 அப்புனற்சீதமடைதலினலரியரியநெட்டிலையுடனரும்பித்

துப்புறழ்சடிலச்சோதிதன்முடிமேற்சூட்டிடக்கண்டுமுன்றோன்றித்

தப்பறவந்தச்சலந்தரன்றனக்குத்தலம்புரந்தருளரசளித்துத்

திப்பியமுறமாலயன்முதலேனோர்சிதைக்கரும்வாழ்வுமீந்தனனால்

1372 மேதகுவரத்தான்மிடலுடன்றோன்றிமிக்குயர்விரிஞ்சன்மால்விண்ணோ

ராதிபுத்​தெளிர்க்ககந்தையேவிளைப்பவாங்கவர்வெருவியேயந்த

வாகையைச்சுமப்பான்வலிபெறாமையினான்மங்கைபங்கொளிர்ந்திடுமெங்கோன்

பாததாமரையிற்பணிந்தவனுயிரைப்பறித்திடல்வேண்டுமென்றிரந்தார்

1373 ஆயதுகாலைமாயவன்கரத்தினாயிரஞ்செங்கதிர்பரப்பு

மீயுயர்கோடிவெய்யவரொளியைவிளக்கிடுஞ்சக்கரமளித்துத்

தீயுமிழ்நெற்றிச்செங்கணாற்கன்னற்செஞ்சிலைக்காமனைச்செற்றுத்

தாயுமாயுயிர்க்குத்தண்ணளிசுரப்போன்சலந்தரனுடறடிவித்தான்

1374 அச்சலந்தரனுக்கருச்சனைக்கேற்றவாய்மலரளித்திடும்பலத்தா

னிச்சயம்பெறநீடாழிசூழுலகினெடியமாலயனரிவரிதாம்

பச்சைமாமயிலோர்பாதிநின்றிலங்கும்பரஞ்சடர்பன்னகாபரணன்

முச்சகம்புகழுமிக்கபூவணத்தின்முத்தியையளித்தனனன்றே

1375 பொலங்கலன்சுமந்தபொற்கொடியிடமாம்புண்ணியன்பொற்பதந்தன்னி

லலர்ந்தநற்செந்தாமரைமலரொடுகண்ணருமலரிட்டருச்சித்துச்

சலந்தரனுடலந்தடிந்திடுமிந்தச்சக்கரந்தன்னைமால்பெற்றா

னலந்திகழ்ந்தோங்குநானிலம்புகழுநற்றமிழ்ப்பூவணநகரில்

1376 இன்னுமோர்காதைதன்னைநீகேண்மோவிந்தநற்பூவணந்தன்னிற்

றுன்னிவண்டிமிருந்தொகுமடற்றாழைதூமலர்த்தாமரைக்கோயி

லன்னவூர்திக்காவன்றுமாறம்முனரியபொய்க்கரிபகர்ந்ததனான்

மன்னியதோடமாற்றியபூசைமகிழ்ச்சியிற்புரிந்ததும்வகுப்பாம்

வேறு

1377 பண்டொர்நாளறுபதமுரன்றிசைபாடியேநடமாடுபொற்

புண்டரீகமலர்ப்பொகுட்டுறைபுங்கவன்புகழ்தங்குவை

குண்டநண்ணியிம்மண்டலந்தருகுரிசில்யானெனவுரைசெய்தே

தண்டுழாய்மலர்மாலைசூடியசார்ங்கபாணியொடறைகுவான்

வேறு

1378 ஏதமேதருமேழ்பிலங்களுமேழொடேழ்புவனங்களு

மோதுதெண்டிரைசேர்கருங்கடலொழுகநன்குமொழிந்திடும்

பூதலந்திகழேழுதீவுயர்பொன்னெடுங்குடுமிப்பொருப்

பாதியட்டகுலப்பருப்பதமானவண்டமடங்கலும்

1379 வித்தகந்திகழ்மரீசிகாசிபன்விளங்குமைந்தரவர்மைந்தரா

கத்துநேமியமுதத்தைநக்குமுகில்கருடகந்தருவர்சந்திரா

தித்தர்சித்தர்கள்வசுக்கள்கிம்புருடர்திக்குபாலர்கணநாதர்வா

னித்தமானதினநீடுதாரகைகணேரில்வானவர்கடானவர்

1380 எண்ணில்பல்லுயிருமெண்ணிரும்பொருளுமென்படைப்பினிலியைந்ததாற்

றிண்ணமீதுமுகில்வண்ணநீயுயிர்திதித்திடுந்தொழின்மதித்திடே

லுண்ணினைந்திலைகொலுன்னையொன்பமூதுடன்பெறும்படிபடைத்தனன்

கண்ணவின்னுமுயிர்காக்கவேண்டிலொருகண்ணனைத்தருவல்காண்டியால்

1381 என்றுவேதியனியம்பலுஞ்செவியினெறிகொளம்படையையெறிதல்போற்

கன்றுகொண்டுகனியன்​றெறிந்தமுதுகடவுணெஞ்சமதுகன்றியே

துன்றுவெள்ளெயிறுதின்றுவாயிதழ்துடிப்பமாமுகிலிடிப்பபோ

னன்றுநன்றெனநகைத்துமாமுடிதுளக்கிமேலிதுநவிற்றுவான்

1382 நாதகீதசதுர்வேதவென்கமலநாபிவந்ததுமறந்துநந்

தாதையென்றுமதியாதுதர்க்கவுரைதருதியானதுதரிக்கிலேன்

பேதமில்லதொர்பிதாமகன்னெனுமொர் பெயர்புனைந்துமதுபேணலா

தோதுநீயொருவர்பாலுதித்தவருரைத்திடாமொழியுரைசெய்தாய்

1383 நளிர்கடற்புவியினிலவுடல்களுமெனன்படைப்பெனநவிற்றினாய்

மிளிர்பிறைக்கணிமிலைச்சுசெம்பவளவிரிசடைக்கடவுண்மேலைநாட்

குளிர்படைக்கையுகிர்கொண்டுநின்னொர்தலைகொய்ததின்றுமதுகூடிடா

தொளிருயிர்த்திரளுமுலகுநீகருதியுதவுகிற்பதையுரைத்திடாய்

1384 ஈதலாதினமியம்பியென்னபயனேடவென்னநெடுமாலய

னோதுகின்றதெவனுந்திபூத்தவனினுந்திதந்தவினையோதினாய்

சோதிசேர்கனகனேற்றவன்றுதிர?ணில்வந்துவெளிதோன்றினா

யாதலாலிரணியன்கொல்கந்துகொனினத்தனென்பதையுரைத்திடே

1385 மாசிலாதமணிமார்பவென்னமதுவாசமேவுகமலாசன

னேசமோடரவினுச்சிநின்றுநெறுநெறுநெறென்னநடமாடுவோன்

பேசொணாதவதிகாரநிற்கருள்செய்பெற்றிதன்னையுமயர்த்தெனை

யேசியேவசைகள்பேசிநீகருதியின்றுவந்தனையெனென்றனன்

1386 என்றுமாலயனின்னபோல்வவெடுத்திசைத்தெதிர்கூவியே

கன்றிநெஞ்சுகலங்கியேமிகுகண்கள்வெங்கனல்சிந்தியே

குன்றுபோன்றெழுகுவவின்மொய்ம்புகுடங்கைகொட்டினரார்த்தனர்

வென்றிசேருலகெங்குமஞ்சினவிண்டதண்டகடாகமே

1387 உடுதிரட்கணமவைகளுக்கனவுற்றபொன்மலைகீறியே

பொடிகள்பட்டனதிக்கயங்கள்புதைத்தகண்கள்புயங்களின்

படமடங்கியபிடியடங்கலுநடுநடுங்கினபலகதிர்ச்

சுடர்களுந்திசைமாறியோடினசுரர்கணெஞ்சுதுளங்கினார்

1388 எதிர்த்துவந்துடனெருக்கிவிண்ணினிடையேற்றுவீழ்ந்துபினுமெங்குமெய்

விதிர்த்துமேல்சுழலலோடுயிர்த்தணிகொள்வீங்குதோளின்முறைதாங்கியே

குதித்தலோடுநனியாடிவெற்றியதுகூறியங்கைகொடுகுத்திடாத்

துதித்துநின்றுதமின்மாறிமாறியெதிர்துள்ளிமிக்கமர்தொடங்கினார்

1389 இந்தவெஞ்சமருடன்றவெல்லையினொரிறைவனோரிருவர்தங்கள்பா

னந்தமாநிலமடங்கலுந்திகிரிநன்குருட்டுகெனவங்கடைந்

தந்தவேவலர்கடந்தமக்கெனவறைந்துபோர்செயமையந்தனிற்

றந்தமன்னவரவர்க்களித்தவதிகாரமாற்றவருதன்மைபோல்

1390 கூடுபாதலமோடுமெல்லைகள்கூடிவேர்விழுந்தோடியே

நீடுமண்டகடாகமெங்குநிறைந்துமேலுநிகழ்த்திடுங்

கேடிலாதபலண்டமானவைகீழ்படக்கனலாகியே

தேடருஞ்சிவலிங்மொன்றவர்முன்னமன்னியசின்னமாய்

1391 சின்னமுன்னுறல்கண்டுமன்னவர்சிந்தையிற்கொடுதேறியே

மன்னுநம்பரமென்றுநாடிவணங்குதற்குமனங்கொளா

தின்னருட்குறிதன்னைநாடுகவீதுநந்துணையாமெனாப்

பின்னருந்தமகந்தைகொண்டிவர்பேசினார்கடம்வாக்கினால்

1392 தீதிலிந்திரனாதிமேதகுதேவர்நீர்கரிதேர்கெனாச்

சோதிலிங்கமதாகநம்மெதிர்தோன்றுகின்றதழற்குறி

யாதியந்தமறிந்துளோரெவராவரேமுதலாவரென்

றோதினார்மறையாவுமாசறவோதுகேமெனுமூமர்போல்

வேறு

1393 திருமாலுமொருநாலுமறைநாவின்விளையாடுதிசைமாமுகப்

பெருமானுமயர்தந்தவரனதடிமுடிதேடுபேராசையா

லொருநாளுமுலையாதவிருகோடுகொடுமன்னியுறுகோலமு

முரமேவுவெண்?வியழகாகுமன்னவுருவும்மாகியே

1394 பஞ்சாயுதக்கடவுளோர்கணத்தாயிரங்காவதம்படியிடந்துங்

கஞ்சாசனக்குரிசில்கணமரையிராயிரங்காவதம்விண்பறந்துஞ்

செஞ்சோதிதருமழற்சின்னத்தினடிமுடிதினந்தேடியுங்காண்கிலார்

நெஞ்சாலுநினைவரியநீ?ழியூழிபலநிகழ்தன்மையதுகண்டனர்

வேறு

1395 முன்னமேவுங்கோலமுகமும்பிறைக்கோடுமொய்ம்பின்றியே

வன்னியாருஞ்சோதியின்னொன்றுமின்றிமெய்மழுங்குற்றிடத்

தன்னுளேதடுமாறியறியாமலரிமீண்டமரர்தங்குலந்

துன்னியயன்முடியறிகிலானென்னவைபந்துணிந்தெய்தினான்

1396 நாலாரணன்சிந்தைநலிவெய்தியனமாகிநனிசென்றுதான்

மேலானவண்டங்கண்முறையேறுசிறைகொண்டவிசைசிந்தியே

மாலானவன்சிந்தைமாலாகுமோபாதமலர்கார்மோ

வேலாதெமக்கென்னவிடைநின்றுமேறுமோவெனவெண்ணியே

1397 போதும்மியானுற்றதுயரங்கொலென்னாப்புலம்புற்றபி

னேதிங்ஙனுரைசெய்வலென்னேயிதென்னேயெனுங்காலையின்

மூதண்டகூடத்துமுடியாதமூர்த்திசடைமுடிநின்றும்வீழ்

காதன்மிகுங்கைதைதனையுமெண்கண்கொண்டுகண்டானரோ

1398 கண்டங்கைகொடுநண்புகொண்டெங்ஙனுற்றடைதிகழறென்னயான்

பண்டங்குவேதங்களறிவரியவிந்தப்பரஞ்சோதியுட்

கொண்டன்புறுஞ்செய்யகோடீரபாரம்மதின்வீழ்குவேய

னெண்டங்குகைநாற்பதின்னாயிரஞ்சதுர்யுகம்மெய்தினேன்

1399 விடுவிடிங்கெனையென்னவிடையுகைத்தேவரும்விமலன்சடா

முடிநின்றுமதுதவறிவீழ்தரலினுயிர்பெற்றுமொழியுமதனா

லிடர்நின்றெமைக்காக்கவிமூதிங்ஙனினைகின்றதெனநெஞ்சிடைப்

படிறொன்றுரைத்திடப்பங்கயப்பகவனிப்பரிசுன்னினான்

1400 கண்டாதரிக்கவருகைதையேதாழையேகண்டலேநீ

பண்டாருமறிவரியபையுளையகற்றவருபான்மையாலே

விண்டாரணிக்கணெற்குன்போலுயிர்த்துணைவிளம்பிடின்வே

றுண்டோவதற்கையமின்றாகுமுரைசெய்வலொன்றுகேண்மோ

வேறு

1401 ஆணையானன்மறையவனாகுமித்

தார்வாமழற்றம்பத்தடிமுடி

நார்றாதந்தநாரணனோடியான்

கார்மாறுகருத்தினிற்கொண்டனன்

1402 அற்புதத்தினிரும்புவிகீண்டுகாண்

கிற்பனாலெனக்கேழலுருக்கொடு

சொற்கடந்தவிச்சோதிலிங்கந்திகழ்

பொற்பதந்தனைத்தேடிமுன்போயினான்

வேறு

1403 கூடியபல்லுகங்கொண்டநாண்முத

னாடிவந்திச்சிவலிங்கநன்முடி

தேடியுமின்னும்யான்றெரிசிக்கின்றிலேன்

வாடினனீயருள்வழங்கல்வேண்டுமால்

1404 கரியமாலாகியகடவுளானுட

னருளினிற்பொருந்தியிவ்வன்னமாயினோன்

குருமிகுதழலுருக்கொண்டவெம்பிரான்

றிருமுடிகண்டனனென்றுசெப்புவாய்

1405 நஞ்சடவருதலுநாரிபாகனுண்

டஞ்சலென்றமரரையளித்ததோர்தியாற்

றுஞ்சிடவந்தநாட்சொல்லரும்பெரு

வஞ்சகம்பொய்யுரைவழங்கலாகுமால்

1406 நறுமடற்றாழைதன்னம்பினோற்குநண்

புறுவதிவ்வுடற்கணேயுதவல்வேண்டுமாற்

பெறுவதுகருதிநண்புறுதிபோற்றியே

மறுமையினுஞ்செயவரம்புண்டாகுமோ

1407 என்னலுநன்றெனவெழுந்துதுன்னியே

மன்னியவண்டிமிர்மடற்பெய்தாழையோ

டுன்னரும்வானெலாமொருவிப்பூதலத்

தன்னவாகனனும்வந்திரியைக்கண்டனன்

வேறு

1408 வரையொன்றெடுத்துநிரைவருமாரிகாத்தநெடுமழைவண்ணவென்வரவுகேள்

கருதுங்கணத்தரையினாயிரங்கொண்டதோர்காதங்கடந்துவிண்போய்ப்

பொருதெண்டிரைக்கங்கைநதிசென்றுவட்டெடுத்தொளிர்செஞ்சடைப்புங்கவன்

முருகொன்றுமுட்பொதியு நெட்டிலைமுடங்கலின்முகிழ்மடலின்முடிகண்டனன்

1409 கருகாமல்விடமுண்டுகண்டங்கறுத்ததோர்காமாரிகற்றைச்சடை

தருகைகதையும்மீண்டுனக்காகயான்சென்றசான்றுரையெனச்சார்ந்ததாற்

றிருமேவுசெந்தாமரைக்கண்ணவின்னவைதேர்கிற்றியாலென்னவே

யருளாழியாய்கண்டதையமின்றேயென்றதந்தவெண்டாழையங்கண்

1410 தருணமுறுபகிரண்டமுகடிடிபடக்கொடியதண்டவடவங்கிமண்டத்

திரிசுடர்கடிசைமாறியலமரத்தெரிவரியதிரிபுவனமிகநடுங்க

வருணசந்திரமதியுமரியகங்காநதியுமமுதவலைதிவலைவீசச்

சுருதியினமுந்தொடர்ந்தறிவரியசெஞ்சுடர்ச்சோதிப்பிரான்றோன்றினான்

1411 அமையாதவன்பருக்காநந்தமேதினமுமருள்கருணைமொழிவதனமு

மிமையாதமுக்கண்ர்மீரிருகரங்களுமெடுத்தேத்துமழுவுமானு

முமையாளொடுடனாயவொருமேனியும்விடையுறக்காண்டலும்பணிந்து

நமையாண்டுகொண்டருளவந்ததொருநம்பனிவனெனவஞ்சிநார்ற்றனர்

வேறு

1412 அலைகடலன்றெழுந்தவந்தநஞ்சுண்டகண்ட

னிலவுதோன்றிடநகைத்துநீண்மறைபாடுவாயான்

மலரவநம்முன்பொய்த்துமாற்றநீவழங்கலாலே

நிலவலயத்திற்பூசைநினக்கிலதாகவென்றே

1413 திரள்செழும்பரிதியென்னச்செம்மணிகிடந்தமார்ப

சரதநீவழங்கலாலேதராதலத்துலகோரெல்லாம்

பரவியேநின்னைப்பூசைபண்ணிடக்கடவரென்று

வரமருள்புரிந்துபின்னும்வாய்மைகளளந்துமன்னோ

1414 மண்டியவாசந்தோய்ந்துவண்டிமிர்தாழைநீயிப்

புண்டரீகன்றன்னோடும்பொய்த்துரைபுகறலானந்

தெண்டிரைக்கங்கைநிர்பாய்செஞ்சடைசேரலென்னப்

பண்டருவேதன்செம்பொற்பதம்பணிந்திவைபடித்தான்

வேறு

1415 இத்தலமுமேத்தவேவந்தருளியெங்கட்

கத்தனுடனன்னையெனவன்புடைமையானே

சுத்தவநுபோகமதுதுய்க்கவருள்வானே

முத்திதருநித்தகுருமூர்த்தமுடையானே

1416 மெய்யுணர்வின்மேலவர்தமக்குரியமெய்யாய்

பொய்யுரையினின்றவர்பொருந்தரியபொய்யாய்

பையிலகுபாந்தளுறுபமூறலைபடுத்த

வையகமதுய்யவிவண்வந்தருளும்வள்ளால்

1417 பாலனையளித்தவொருபார்வைதருபாலா

நாலுமுநிவர்க்கறநவிற்றுமறைநாவா

காலனுயிருண்டுசுவைகண்டுமகிழ்காலா

சூலியுடன்வாதுநடமாடுதிரிசூலா

1418 நாதமொடுவந்துவருநாதமுறுகீதா

வோதரியநான்மறையுரைத்தருள்விநோதா

காதன்மிகமேவுகுழைகாணவணிகாதா

பாதகமனைத்தையுமறுத்தருள்செய்பாதா

1419 கற்பனையில்வந்துபொருகாமனையெரித்தோய்

சொற்பரவுநான்மறைதுதித்திடுதுரங்கா

பொற்புறவணிந்திலகுபூடணபுயங்கா

சிற்பரமஞானிகடினம்பருகுதேறால்

1420 மிக்கதொருதக்கனதுவேள்வியையழித்தோ

யக்கடலினின்றுவருமாலவிடமுண்டோய்

மொக்குளினியங்கவுணர்முப்புரமெரித்தோய்

திக்குலகெலாம்புரவுதிங்களைமுடித்தோய்

வேறு

1421 என்றுபுனைந்துரைபலகொண்டேத்திடலுமெம்பெருமானிரங்கிப்பின்னர்

மன்றன்மிகுநறுஞ்செந்தேன்வாய்ததும்பிவழிந்தொழுகுமலர்ப்பூங்கோயிற்

பொன்றிகழும்பொற்பொகுட்டுப்புங்கவநின்பொய்த்துரையிற்பொருந்துந்தோட

மொன்றியபன்மகம்புரியினுயர்ந்தகந்தமாதனத்தினொழியுமென்றான்

1422 ஆங்கதுகாலையிற்கைதையடியேனையஞ்சலெனவருள்வாயென்னாத்

தேங்கியவத்திறனறிந்துதிரிந்தமுகந்தெரிந்துதிருவுளந்துணிந்து

பாங்கின்மலர்ப்பரமேட்டிதனக்காநீபொய்யுரைத்தபாவம்பாறும்

பூங்கமலத்திருமருவுபூவணத்தினமைப்பூசைபுரிதியன்றே

1423 அப்பிரமன்றனைத்தேசுமிக்கபிரானிருந்தவிடத்தடைதியென்று

செப்பிவிடைகொடுத்ததற்பின்றிண்டிறன்மால்வைகுண்டஞ்செல்லவேவிப்

பொய்ப்பகர்தறருமுடங்கற்பூவினையப்பூவணத்திற்போதியென்னாத்

துப்புறழுஞ்செஞ்சடிலச்சோதியிலிங்கங்கரந்தான்றொன்மையேபோல்

1424 தேவர்பிரானிம்மாற்றஞ்செப்பியுருக்கரந்ததற்பின்றிருமடந்தை

மேவுமுகந்தொறுநிறுவிளையாடும்பூவணத்தின்விரைந்துபோந்து

தாவருஞ்சீர்தருபாரிசாதநிழற்றங்குசிவலிங்கம்பூசித்

கோவில்புகழுறுகைதையுரைத்திடும்பொய்ப்பவத்தினுநின்றொழிந்ததன்றே

வேறு

1425 நித்தமாய்மேலாயென்றுநீடுயிர்க்கறிவாய்ப்போக

முத்தியையளிக்குமுக்கண்மூர்த்திதன்வடிவமாய

சததியமோனஞானசவுநகமுநிவமேலா

மித்தலப்பெருமையெம்மாலெடுத்துரைசெய்யலாமோ

1426 முத்தியோருருவமாகிமுளைக்குமிவ்விலிங்கத்திற்குப் பத்தியான்மூன்றுதூணிபசுவினன்பால்வடித்துப்

புத்தியினிடபத்தங்கட்பூரணைபொருந்துகின்ற

வித்தகவிசாகந்தன்னிலவெய்யனொடுங்கும்வேலை

1427 நீதியின்வழாதுமுன்னநிகழ்தருபூசையாற்றிக்

காதலினிருந்துதாஞ்சங்கற்பமும்பண்ணிச்சங்கின்

வேதமந்திரத்தினாலேவிரைகொண்மஞ்சனம்பூரித்துத்

தீதறத்தாபித்தன்பிற்றிருந்தபிடேகஞ்செய்து

1428 அந்தநல்லமுகந்தன்னையன்புடனபிடேகித்தே

யந்தநற்புகழ்சேர்கின்றவர்த்தநாரீசற்காண்பா

ரந்தநற்றரிசனத்தாலரசராயனைத்துஞ்சேர்ந்தாங்

கந்தமிலாதமூர்த்தியான்கழலடைவரன்றே

1429 கூடியபேரன்புள்ளங்கொண்டமார்க்கண்டனென்போன்

நீடுமச்சிவலிங்கத்தினிகழ்த்துமான்பான்முன்னாட்டித்

தேடருமர்த்தநாரீசன்றனைத்தெரிசித்தங்க

ணாடருஞ்சீவன்முத்திநண்ணினனறிகமாதோ

1430 ஆதலினிந்தக்காதையறைந்திடினறிதறேற்றார்க்

கோதலைவைதிகத்தோர்க்குரைத்திநீயெனவியாதன்

காதலினுரைக்கப்பான்மைகட்டுரைத்தனன்யானன்றி

யேதமின்முநிவிர்காளீதெவராலுமியம்பலாமோ

1431 கொலைபழுத்தொழுகும்வைவேற்குமரவேணந்திக்கோதத்

தலமலிபுகழ்சேர்நந்திசநற்குமாரற்குரைப்ப

வுலகெலாம்பரவவன்னோனுயர்வியாதற்குரைப்ப

வலைவறவவன்பால்யான்கோட்டறைந்தனனுமக்கின்றன்பால்

1432 என்னலுமுநிவரந்தவேதமில்சூதன்றன்னை

மன்னியதருப்பைசீரைவண்கனிமூலந்தன்னாற்

பன்னரும்பூசையாற்றிப்பன்முறைதழீஇக்கொண்டன்பா

லந்நிலையாசிகூறியானந்தடைந்தாரன்றே

1433 பன்னுமிப்புராணந்தன்னைப்படிக்குநர்தம்மையன்பான்

மன்னியவாசனத்தன்வைத்தருச்சனைசெய்வோர்க்குப்

பொன்னுலகேத்துந்தொல்சீர்ப்பூவணத்தரனைப்பூசை

தன்னைநன்கியற்றினோர்கடாம்பெறும்பலன்களுண்டாம்

1434 தேடரும்பலன்கணல்குந்தென்றிருப்பூவணத்து

நீடுசேர்புராணந்தன்னைநிகழ்த்திடுஞ்செவிநிறைத்து

நாடியபொருள்கள்யாவுநண்ணலானவிற்றுஞ்செஞ்சொற்

பாடலைவருந்தியேனும்புரிவுடன்கேட்கப்பண்ணே

1435 புவனமெங்கர்ஞ்சீர்போற்றும்பூவணமான்மியத்தை

நவிலுறச்செவிக்குநாளுநல்விருந்தளிக்குநர்க்குச்

சிவபிரானருளினாலேதேடுபேருவகைகூடுஞ்

சவுநகமுநிவவீதுசத்தியஞ்சத்தியங்காண்

வேறு

1436 ஒப்பிலாதவுருத்திரசங்கிதையுற்றபூவணநற்கதையோதுவோர்

செப்புமாறுசெவிக்கொடுமன்னியசிட்டராயசிறப்புறுதன்மையோர்

விப்பிராதிபவித்தகமெய்ம்மொழிமிக்கவேதவிதத்துயர்மாதவீர்

தப்பிலாததவத்திருமன்னவர்தயாபரன்கயிலைக்கிரிவாழ்வரே

வேறு

1437 வாழ்கமன்னவன்செங்கோன்மழைமுகில்

வாழ்கநான்மறைவாணவர்கணானிலம்

வாழ்கவைதிகசைவமலர்த்திரு

வாழ்கவஞ்செழுத்துண்மைநன்மந்திரம்

சிதம்பரவுபதேசச்சருக்கமுற்றியது

ஆகச்செய்யுள் 1437

*****

திருப்பூவணப்புராண முற்றியது

திருச்சிற்றம்பலம்.

மெய்கண்டதேவர் திருவடிவாழ்க

சிவஞானயோகிகள் திருவடிவாழ்க

கந்தசாமிப் புலவர் திருவடி வாழ்க.

சுபம்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book