17

இரண்டாவது

திரணாசனன் முத்திபெற்ற சருக்கம்

310

ஓதரியவுண்மையதாயோங்குபரி பூரணமாயுவமையின்றாய்ச்

சோதியதாய்ச்சுகவடிவாய்ச் சொல்லரிதாய்ச் சுருதிகளுந்தொடரொணாதாய்க்

காதலினாலனைவர்களுங்காண்பரிதாய்க்காரணகாரியங்கடந்த

வேதமறுபொருளினையாமிதயகமலத்திருத்தியிறைஞ்சுவாமே

வேறு

311 சத்தியஞானமார்சவுநகாதிப

வுத்தமராந்தவத்தோர்கள்சிங்கமே

சித்தநன்குணர்திரணாசனன்றிகழ்

முத்தியையடைந்தது மொழிகுவாமரோ

312 என்னலுமன்னுயிர்க்கிரங்குன்னரு

ணன்னலந்தயங்கிய….கமுகத்தனாய்த்

தன்னிகரரு…. வச்சவுநகன்புகழ்

துன்சூதனைத்துதித்தன்மேயினான்

(…குறியிட்டுள்ள இடங்களில் எழுத்துக்கள் அழிந்துள்ளன)

வேறு

313 எம்பிரானருளினாலேயாவையுமுணர்தலானு

மம்புவியிடத்துரோமகருடணனெனும் பேரானு

மும்பருமுணரவொண்ணாவொரு பொருளுடைமையானு

மிம்பரினுனக்குநேராமிருந்தவவாணரின்றால்

314 உலகெலாம்பணிந்து போற்று முயர்தவத்தும்பரானே

நிலவுபேரின்பநல்குநீடருட்பெற்றியானே

குலவியநண்பெஞ்ஞான்றுங்கூட்டியகொள்கையானே

கலையுடையோர்கடம்பாற்கழிபெருங்காதலானே

315 சைவமார்க்கண்டங்காந்தந்தந்தங்கியவிலிங்கங்கூர்மம்

வையகம்புகழ்வராகம்வாமனமருவுமச்சம்

பொய்யறுபிரமாண்டஞ்சீர்பொருந்துநற்பவுடிகத்தோ

டெய்தியபிரமம்பாற்பமிசைத்திடுமிவற்றினோடும்

316 காதல்கூர்நாரதீயங்காருடம்வயிணவஞ்சூழ்

மாதிரம்புகழும்பாகவதத்துடன்மருவுமேத

பேதமிலாக்கிநேயம்பிரமகைவர்த்தமியாவு

மோதிடநின்னாற்கேட்டோமொன்பதிற்றிருபுராணம்

317 ஆங்கவைதன்னின்மேலாயறைந்தனையலர்ந்தசெம்பொற்

பூங்கொடிபடர்ந்துநீடும்பூவணமதனைப்பின்னு

மோங்கியகாதைநாப்பர்ரைத்தனைபூருவத்திற்

பாங்கினாற்கும்பகோணமென்றொரு பதியதன்றே

318 மக்களுக்கிழைத்தநீதிமாதவம்பலிப்பதாகித்

தொக்கவெம்பிறப்பிற்சூழுந்தொல்பவந்துடைப்பதாகித்

தக்கசெல்வங்களெல்லாந்தானருள்புரிவதாகித்

திக்குடையுல்கம்போற்றுந் தீர்த்தங்கள் பலவுமாகி

319 கலிவலிதொலைப்பதாகிக்கண்ணகன்ஞாலந்தன்னி

னலகிலாவுயிர்கட்கெல்லாமாநந்தமளிப்பதாகிப்

பலமுநிகணங்களோடுபண்ணவர்பணிவதாகிக்

குலவுமாச்சரியமாகிக்கோதிலாச்சிரமமாகி

320 சோதியாயுலகமெல்லாஞ்சுத்தமாக்குவதாய்மேலா

யாதிதெய்விகத்தினோடுபவுதிகமான்மிகத்தைப்

போதல்செய்பெற்றித்தாயபூவணந்தன்னின்மன்னு

மேதகுதானமுண்டேல்விரித்திவண்விளம்புகென்றான்

321 விளம்புவனென்றுவேதவியாதன்மாணக்கன்சொல்வா

னுளங்கொளுந்தவத்தோரேறேயுற்றநின்பாக்கியத்தாற்

களங்கமின்றாயதோர்நற்காரணந்தன்னான்மாதோ

வளந்தறிவொண்ணாப்புந்தியடைந்தனையன்றோவென்றான்

322 மண்ணிலாயிரம்பிறப்பின்மனமொழிகாயந்தம்மாற்

பண்ணிடுங்கருமத்தாலேபல்பெரும்பதியினென்று

மெண்ர்ம்யாகாதிகன்மமியற்றியேதீர்த்தமாடி

நண்ர்புண்ணியதானத்தினற்றவம்புரிந்துமாதோ

323 சொல்லருமின்பமுற்றுச்சுவர்க்காதிபோகந்துய்த்துப்

பல்பயனருந்திப்பின்னர்ப்பாரிடைநரர்களாகி

யல்லலொன்றின்றிநாளுமரியநற்றருமந்தன்னி

னல்லதொல்குலமுற்றோற்குநண்ணிடும்புந்திதானே

324 புந்திதானுடையதாகப் பொருவிடைப்பாகன்மேவு

மந்தணமானதானமான்மியந்தனைவினாவுஞ்

சிந்தனையுண்டாமீதுதீமையோர்க்கடையலாகா

திந்தநீர்முறைமைநீசெயிருந்தவப்பேறேயன்றோ

325 அந்தணர்தமக்குமேலோயானுநன்கடைந்தேனாக

நந்துநின்னளியென்றோதுநாரினாற்பிணிக்கப்பட்டேன்

முந்துசெல்வத்துச் செல்வமுழுதொருங்குடையோய்நின்னாற்

புந்திகொள்செல்வம்பெற்றோனாதலாற்புகல்வன்கேண்மோ

326 உலகெலாமொடுங்கும்போதினுததிகளேழுமொன்றாய்த்

தலைதடுமாற்றந்தந்துதாபரசங்கமங்க

ளிலயமதடைந்தகாலையிருந்தரைதனக்குநாளு

மலகில்காரணத்தினோடங்கமைந்தகாரியமுமாகி

327 பெற்றிடுமமுதகும்பம்பிரளயசமுத்திரத்தி

னுற்றதனாப்பணின்றுமுலாவுபுவதியுங்காலை

மற்றையததனைவிண்டுவந்துமுக்கூறுதந்து

சிற்சிலகாலஞ்செல்லத்தெருண்டவானர்கிமாதோ

328 பூவுறைதிருவின்மேலாம்பூவணந்தன்னின்முன்னுந்

தாவில்சீர்க்கும்பகோணந்தன்னிலாங்கதற்குப்பின்னு

மேவியததன்பினாமம்விளங்குநற்றலங்கடோறு

மூவுலகங்கள் போற்றுமுக்கணனருளின்வைத்தான்

329 நாமநீர்வையம்போற்றுநல்லமிர்தாம்மிசத்தொன்

றேமமாம்புட்பமாகியின்னமுதுருவமன்னிப்

பூமகள் பொருந்திவாழும் பொழிறிகழ்பூவணத்தின்

மாமணிகன்னிகைக்கண்வந்ததுவீழ்ந்ததன்றே

330 நிகழ்தருமருளினாலேநிறைந்தநன்னேயத்தோடு

மகிழ்சிறந்தோங்குமாதிவருணகேண்மருவுதீர்த்தந்

திகழ்மாயாதீர்த்தமென்றுஞ்செங்கண்மால்விடையின்பாகன்

புகழ்மணிகன்னியென்றும் பொருந்தியதிரண்டுநாமம்

331 தருமமாம்பொருடனக்குத்தங்கியவங்கிதிக்கிற்

றிருந்தழகியமின்னன்னைதிகழ்திருமுன்னர்ப்பாங்காற்

பொருந்துதெய்வீகமாமப்புநிததீர்த்தம்படிந்தோர்க்

கரும்பிரமகத்தியாதியாம்பவமனைத்துநீங்கும்

332 பொழிறிகழ்புராதனத்தெம்பூவணங்கோயில்கொண்ட

குழகனைத்தொழுமுன்செம்பொற்கொடிதனைக்கும்பிட்டோர்க

டொழுதிடுமக்கணத்திற்றொடர்புறுந்தோடந்தன்னால்

விழுவர்களகோரமென்னும்வெங்கொடுநிரயந்தன்னுள்

333 ஆதலினன்புகூர்ந்தேயரும்பெருங்கலைதெரிந்த

மூதறிவுடையோர்முக்கண்மூர்த்தியைத்தொழுகமுன்ன

மாதலினீதியாலேமங்கையையங்கைகூப்பிப்

பாததாமரையிற்பின்னர்ப்பணிந்திடக்கடவரன்றே

334 மெய்முநிகணங்கட்கெல்லாம்விழைவுறுந்தவத்தின்வேந்தே

யெய்தியதெனதுசிந்தையையமொன்றிதனையின்னே

பொய்யறுகேள்வியோய்நீபோக்குவதன்றியிந்த

வையகந்தன்னில்வைகுமாதவரில்லைமாதோ

335 என்னெனிலியம்பக்கோண்மோவிறைவியையிறைஞ்சுமுன்னர்த்

தொன்னெறிசிவலிங்கத்தைத் தொழார்க்குறுந்தோடமென்றி

யன்னதுதான்வந்தெவ்வாறடைந்திடுமீதுபூர்வந்

தன்னில்யான்கேட்டதின்றாற்சாற்றுதிதவத்தோயென்றான்

336 சாற்றுகேன்சநற்குமாரன்றானுமீதையமுற்றே

நாற்றலைப்பெருமான்றன்னைநர்குமுன்னயந்துகேட்ப

வேற்றமாமிதிகாசத்திலெடுத்தவனிசைத்ததொல்சீர்

மாற்றமில்காதையொன்றுமாதவத்தலைவகேண்மோ

வேறு

337 முன்னாதியுகந்தனின்மோதுதிரைத்

தென்னார்ந்தகௌதமிதீரமுறு

மந்நான்மறையோர்குலமாதவனாம்

பன்னாசனன்றன்பரிவின்வருவோன்

338 திருவின்மகிழுந்திரணாசனனென்

றருமந்தபெயரதுதந்துடையோன்

றருமந்திகழ்வைதிகசைவனுளங்

குருவின்சரணங்குடிகொண்டிடுவோன்

339 வழுவாதருளின்வழிநின்றிடுவோன்

பழுதானவையொன்றுபகர்ந்தறியான்

முழுமாதவமென்றுமுடித்திடுவான்

செழுநான்மறைசேர்திருவாயுடையான்

340 மிகுமேதகுநல்விரதந்தருவோன்

றொகுமாதருமத்துறைநின்றிடுவான்

புகல்வேள்விகணன்குபிரிந்திடுவான்

சகவாழ்வுதணந்திடுதன்மையினான்

341 வேதங்கரைகண்டருள்வித்தகனீ

டேதந்தருசெய்கையிசைந்தறியா

னோதும்புவனத்துயிருக்குயிரா

நாதன்புகழன்றிநவின்றறியான்

342 செவ்வான்மதிபோற்றிகழ்நன்னுதலா

ரவ்வாழ்வெனுநீடலையாழியிடைக்

கவ்வாதுயருங்கதிதன்னையினி

யெவ்வாறடைவோமெனவெண்ணினனால்

343 பொய்வாழ்வினையேபொருளென்றுதின

மெய்வாழ்வினையேவிடுகின்றனமா

லைவாய்வருபொருளினவாவினைநீத்

துய்வான்வழியாமுணர்கின்றிலமால்

344 பேராதுறுநற்பொண்ணாசையினா

லாராதுலகத்தடையக்கடவே

னேராருமிலாநிமலன்னருளாற்

சீரார்கதியெவ்வழிசேர்குவனால்

345 விண்ணாடர்களும்மேலானவரும்

பெண்ணாசையினாற்பிழைபெற்றனராற்

பெண்ணாசைவிடப்பெறுகின்றவரே

கண்ணார்நுதலான்கழல்சேர்குவரால்

346 சிறைசேருடலின்செயன்மாண்டிடவோர்

குறிதானருளுங்குருதேசிகனா

லறிவாலறியுமருளாலறியப்

பெறுபேறினியான்பெறுமாறெவனோ

347 கைம்மான்மழுவுங்கனல்சேர்விழியு

நம்மாதரவானனிநாடரிதா

லிம்மானுடர்போலிம்மாநிலமேற்

பெம்மானருளப்பெறுமாறெவனோ

348 என்னாவியைபன்னியிரங்கியெழா

முன்னான்மறையோதியமூதறிவாற்

றன்னாசிரியன்றனை யெய்திடுவா

னன்னாமநவிற்றிநடந்தனனால்

வேறு

349 கோடிவான்மதியமுங்கோடிபாநுவு

நீடியபேரொளிநிறைந்தமெய்யனை

வீடருந்தவத்தினான்மிகச் சொலித்திடும்

பீடுறுதேசினாற்பிறங்குவான்றனை

350 படர்புவியிடத்துயிர்க்கருளும்பான்மைசேர்

நடையனைநான்மறைநவிற்றுவான்றனைத்

தடைபடாதருளினாற்சார்ந்தநெஞ்சனை

யிடருறுமில்லறமிறப்பிப்பான்றனை

351 புண்டரநீற்றணிபொலிந்தமுண்டனை

வெண்டிருநீறதுவிளங்குமெய்னைக்

கண்டிகைகொண்டிடுகவின்கொண்மார்பனைக்

குண்டிகைதாங்கியேகுலவுங்கையனை

352 முருகவிழ்தாமரைமுகத்தினான்றனைப்

புரிமணமிசையினிற் பொருந்துவான்றனைத்

திரிபுரமெரிசெய்தசிவபிரான்றனின்

மருவியதிருவுருவயங்குவான்றனை

353 விட்டிடும்வேணவாவேட்கையான்றனைச்

சிட்டர்கள்பரவிடுந்தேசிகன்றனைக்

கட்டுவார்சடையனைக்கருதருந்தவ

முட்டறுரோமசமுநியைக்கண்டனன்

354 மூண்டெழுகாதலான்முடுகிக்கண்ர்றீஇப்

பூண்டபேரன்பின்மெய்புளகம்போர்த்தனன்

மாண்டகுசிந்தையன்வரம்பின்மாதவங்

காண்டகுமுநிவரன்கழலிறைஞ்சினான்

355 அருள்பெறுமாசையாலடியற்றேவிழு

மரமதுவென்னவேவல்லைவீழ்ந்தெழீஇக்

கருணையங்கடலதாங்கடவுள்கேளெனாக்

குருபரனோடிவைகூறன்மேயினான்

வேறு

356 மங்கையர்மைந்தரென்னும்வங்கவாரிதியின்மூழ்கிப்

பங்கமதுற்றியான்செய்பவத்தினாலழுந்துகின்றே

னங்கதினழுந்தலாலேயறம்பொருளின்பம்வீடென்

றிங்கிவையொன்றுந்தேறேனியம்பிடினிவற்றினென்னாம்

357 இல்லிடையிருந்தலாலேயில்லதேயுண்டாம்பின்னர்ச்

செல்வம்வந்தடையுமந்தச் செல்வமுந்தேயும்பின்ன

ரல்லல்வந்தடையும்பின்னரகமிகழ்வுண்டாம்பின்னர்ப்

புல்லுதற்கரியமேலாம்புத்திரராவரன்றே

358 புத்திரராயகாலைப்பொருந்திடுங்கீர்த்திமிக்கா

மத்தகுமதனானிந்தையடைந்திடுமடைதலாலே

மெய்த்தகுவியாதிவந்துமேவிடுமேவலாலே

நித்தமும்வருத்தநீடுநீடநித்திரையுண்டாகும்

359 நித்திரையான்மூதேவிநிகழுமங்கதனால்வேறோர்

மெய்த்தனம்விருப்புமத்தான்மிக்கிடுந்துன்பமுற்றுச்

சித்தநன்னிலைதிரிந்துதிபங்கிநாடொறுமயங்கி

யத்தமாஞ்சுழியிலாழ்ந்தேயறவுமெய்வருந்துமன்றே

360 வருந்தவேநாளும்பாந்தள்வல்விடவடிவதாகி

யிருந்திடருழக்குமிந்தவில்லிடையியைந்துநாளும்

பெருந்துயர்கொடுகீழ்மேலாய்ப்பிறந்திறந்துழன்றேனானே

யருந்தவமியற்றினெவ்வாறடைந்திடுமின்பமுத்தி

361 குருபரவெனக்குநீயேகூறிடுகதிவேறின்றான்

மருவும்யாகாதிகன்மமாவிரதங்கள்சாந்தி

யரியநற்றவந்தானங்களன்றியே​யெளிதிற்சேரு

முரியதோர்கதிக்குபாயமுண்டெனினுரைத்தல்வேண்டும்

362 சுந்தரத்தவத்தாலங்கஞ்சொலித்திடுஞ்சோதியானே

சிந்தையினுணர்ந்துவல்லேதிருவருள்புரிதியென்ன

வுந்துகாதலின்மிக்கோங்குமுரோமசமுநியுவந்தே

யிந்தவாறுரைப்பக்கேட்டியெனத்திருவாய்மலர்ந்தான்

363 நந்துநான்மறைதெரிந்தநற்றிரணாசனப்பேர்

மைந்தனேமதிவயங்குமாட்சிமையுடைமையானே

யிந்தமாநிலத்தெஞ்ஞான்றுமெண்ணிடினரர்களாலே

வந்திடுமுபாயந்தன்னான்மருவியதருமமெல்லாம்

364 மெய்ம்மையதாகியிந்தமேதகுமுலக்குக்கெல்லாஞ்

சம்மதமாகிமுன்னஞ்சாற்றிடுமுபாயமின்றி

யம்மநிற்கறைதல்வேண்டியன்பினேமாய்ப்புகுந்தே

மிம்முறைமையினாற்சேருமென்பதுமதித்தாமன்றே

365 நற்கதிபலவுஞ்சென்றுநான்மறைவிதிவழாம

லற்புதமருவுதீர்த்தமாதடிநீயாங்காங்குற்ற

சிற்பரமாகியோங்குஞ்சிவலிங்கங்கண்டுசூழ்ந்தே

யுற்றபேரன்பினோடுமுவகையினுறப்பணிந்து

366 மதிவலோய்வாரிசூழுமலர்தலையுலகம்போற்ற

விதிமுறைவிசேடித்தன்பின்மிக்கதானங்கணல்கித்

துதிகொடிம்முறையினாற்றிற்றொல்பவமொல்லைநீங்குங்

கதிபெறலாகுமின்றேற்காணலாந்தகையதன்றே

367 எனமுநிகழறியன்போடின்னருள்விடையுந்தந்தே

முநிவனன்றுரைக்குமந்தமுதிர்பழச்சுவையின்சொல்லா

லினிதுடல்புளகம்போர்த்தாங்கில்லறந்துறந்துவல்லே

புனிததீர்த்தங்களாடிப்புந்தியிற்கொண்டுபோந்தான்

வேறு

368 நயிமிசங்கெயைநற்பிரயாகையே

யயர்வில்புட்கரம்ரோமகருடணம்

பயிறருஞ்சுரபாண்டம்பைசாசமே

யியல்கன்மோதகேச்சுரமிராக்கதம்

369 கோதில்கோகன்னங்கோமுகைகட்கமே

நாதனன்குறுஞானகுண்டங்கதை

காதல்கூர்பிரபாசங்கபிலையே

பாதகந்தவிர்க்கும்பாபமோசனம்

370 போருப்பதங்கோவர்த்தனம்புகழ்

சீபருப்பதந்தீர்த்தந்தினந்தரு

மாபுகழ்க்காமசாரமாசற்றசீர்த்

தூபமிக்கெழுந்தூயசோணாசலம்

371 கேடிலாதகிருட்டிணவேணிநல்

வீடுநல்கிடும்வேகவதிம்மிகும்

பீடிலங்குசொற்பேசுப்ரயாணமாஞ்

சேடதீர்த்தந்திகழுந்திருநகர்

372 மிக்ககாஞ்சிகாவேரிவிலாளமே

தக்கசம்புதலமயறீர்த்தங்கள்

பக்கமோடுபடிந்துவிதிமுறை

தொக்கலிங்கங்கள்யாவுந்தொழுதரோ

373 பன்னுசெந்தமிழ்ப்பாண்டிநன்னாட்டினின்

மன்னும்வைகையின்வந்துபடிந்தபி

னன்னமென்னடையங்கயற்கண்ணியோ

டென்னையாளுடையானையிறைஞ்சியே

374 முன்பகர்ந்ததோர்யோசனைமூண்டிடும்

பொன்பயின்றதென்பூவணமேவியே

யின்பமாமணிகன்னிகையிற்படிந்

தன்பினன்னையையஞ்சலிசெய்தரோ

375 மிக்கவூழ்வந்துமேவிடவாயிடை

முக்கணன்றிருமுன்சென்றுதாழ்ந்தெழீஇப்

பக்கமோடுபதம்பணியாமலே

தெக்கிணாவர்த்ததென்றிசைசென்றனன்

376 சென்றுகாவதத்திற்றிகழ்திருச்சுழியற்சிந்துதீர்த்தம்படிந்தியல்பிற்

பின்றிகழ்பின்னல்பிறங்குவானவனைப்பெரிதருச்சனைமுடித்ததற்பின்

பொன்றிகழ்புரிசைப்பூவணத்தடைந்தப்புனிதநீர்படிந்ததன்கரைமே

லொன்றினனாகவோரிராக்கதனாயுழன்றுதன்னலமிழந்தன்றே

377 இருளறவுலகத்திருங்கதிபெறுவானெழில்பெறுபுனிதநீராடி

விரவுநல்லந்தவேதியன்றனக்குவிபரீதமாகவேமேவுங்

கருதருகிரமங்கடந்ததோடத்தாற்கதுமெனக்கலங்கியேயுள்ளம்

பரவழன்றினும்பைசாசமெய்கொடுவெம்பசியினாற்பரிதபித்திருந்தான்

378 ஆனதோர்காலையருவினைப்பயத்தாலங்கணனற்பதங்காண்பான்

றேனிவர்வாசந்தினங்கமழ்பொழில்சூழ்தென்றிருப்பூவணந்தன்னிற்

பான்மைசேரிரண்டாம்பரிதிகண்டாங்குப்படர்ந்தபேரொளிநிழற்படிவ

நான்மறைபயிலுநல்லிசைவீணைநாரதமுநிவனண்ணினால்

379 ஆயவன்றன்னையந்தமாமுநிகண்டையவென்றமுதமாமொழியாற்

பேயினதங்கம்பெற்றனையாரேபெரும்பசியுற்றனைபோலா

நீயுரைவிளம்புகென்னலுமவன்பினீடுபேருவகையிற்கூடித்

தூயமாதவனைத்தொழுதுகாண்கையினாற்றொல்லுணர்வடைந்திவைசொல்வான்

380 காதல்கூருலகிற்கனைகதிர்ப்பரிதிக்கடவுளையனையநாரதனே

யோதுமில்வாழ்வாமுததியினடர்ப்பட்டுறுகதிபெறுகுவான்விரும்பித்

தீதறுதீர்த்தம்யாவையும்படிந்தித்திருநகர்மருவுதீர்த்தந்தோய்ந்

தேதமாகியமின்னெனுமனைவாழ்வையெறிந்திடவெண்ணியானியைந்தேன்

வேறு

381 காதலுடன்மேவுவடுகக்கடவுடன்னைப்

பாதகமலங்கண்மிசைசென்றுபணிவுற்றே

கோதறுநன்னீர்கொண்மணிகுண்டமதின்மூழ்கி

யாதரவினேறினனகன்கரையினம்மா

382 அந்தவமையந்தனினல்லந்தணர்தமன்னா

சிந்தனைகலங்கியமெய்திரிந்தனனியானே

முந்தைவினையோவலதுமூண்டபவமேயோ

விந்தவிதிவந்ததெதுவென்றறிகிலேனே

383 நெருக்கியுதரத்தினுறுநீடுபசியாலே

யிரக்கமறமுன்பினியையாதனபிதற்றி

யரக்கவுருவாயிவணலக்கண்மிகவுற்றேன்

விரிக்கினிதுமுன்விதிவிலக்கிடவொணாதே

384 பரம்புபணைகொண்டெழுபராரைமரநீழல்

விரும்புமொருவன்றலைவிங்கனியையொக்கு

மிரும்புனலியாத்திரையினெண்ணமுறுமென்முன்

புரிந்ததவநீமகிழ்பொருந்திவரலாலே

385 உன்னையலதோர்கதியுரைத்திடவுமுண்டோ

வன்னதினின்முன்னிகழுமாயிரசென்மத்தின்

மன்னுபவநின்னடிவணங்கிடவகன்ற

தின்னினிமகிழ்ந்திவணிரங்கியருளெந்தாய்

386 என்னலுமிரங்கிமிகுமின்னருள்சுரந்தே

யன்னவனைநின்னிலெனவங்கையினமைத்தே

மன்னியசெழுங்கமலவள்ளல்பெறவந்த

நன்மகதிவீணைபயினாரதனிசைப்பான்

387 அந்தணர்குலத்தலைவவஞ்சலினியஞ்சல்

வந்துளதொர்காரணம்வகுத்திடுவனின்னே

புந்திகொண்மெய்பூவணபுரத்தினினிதாக

முந்தியுரைதந்தபரமுத்தியதுவுண்டே

388 நீவிதிவசத்தினவணேர்ந்துமணிநீடும்

பூவணபுரேசனிருபொன்னடிதொழாதே

தேவியிருபாதமலர்சென்றுதரிசித்தே

மேவினைபின்வேறொர்பதிவென்றியுடனன்றே

389 வேதியர்குலாதிபவிளம்பிடுவனீயிப்

போதுமலர்மாதுதிகழ்பூவணபுரஞ்சேர்

நாதனைவணங்கியபினாயகிசெழும்பொற்

பாதமலரன்பொடுபணிந்துபவநீப்பாய்

390 காசிகெயையீசனடிகாமர்புனன்மூழ்கி

நேசமொடிறைஞ்சினர்கணேர்ந்தபலனெல்லாம்

பூசுரர்களாசைதருபூவணமெனும்பே

ராசில்பதிவந்தடையுமையமிலையம்மா

391 ஓர்கவினுமோதிடுவமுண்மையிமூதுண்மை

பூர்வமதுவாகியதொர்பூவணமதன்க

ணேர்தருமெம்மானைமுனிறைஞ்சுதல்செயாரே

லூர்கிருமியார்நிரயமுற்றிடருழப்பார்

392 அவ்வளவதன்றுலகிலாய்வருவர்நாயா

யிவ்வுரைநன்மந்தணமியம்பிடுவதன்றால்

வெவ்வினைகடிந்துதவமேண்மைபெறலாலே

செவ்விதினினக்கிதுசெப்பினமியாமே

393 பன்னுதுமியாமுனதுபாவமறவீடு

முன்னினுலகம்புகழுமோர்புனிததீர்த்த

மின்னதெனவேயறிவதெம்மிறைவனன்றி

யன்னதனின்மேன்மைதனையாரறியகிற்பார்

394 பூர்வமுறுமீசனதுமுன்னமுறுபூர்வத்

தோர்தருமைஞ்ஞூறுவரிவிற்கிடையினுற்ற

தேர்கொள்கடிவாசநனியியற்றியததற்குப்

பேர்பிரமதீர்த்தமெனவேயுலகுபேசும்

395 புத்தியொடபுத்திதருபூர்வகருமங்க

ளித்துயர்வருங்கிரமபங்ககருமங்க

ளுத்தமகுலோத்தமவிமூதுண்மைபடிவுற்றாற்

சித்தமகிழப்பிரமதீர்த்தமதகற்றும்

396 அருந்தவரைநிந்தனையறைந்தவதிதோட

மிருங்குலவொழுக்கமதிகந்தகனதோடம்

பரந்திடுமந்நீர்விழிபரப்புவதனாலே

பொருந்துமரனாணையதனாலிவைகள்போக்கும்

397 கார்த்திகைநன்மாதமுறுகார்த்திகைநன்னாளிற்

றீர்த்தர்தினமும்படிசெழும்பிரமதீர்த்தங்

கூர்த்தவறிவோயதுகுளித்திடுகளித்தே

யார்த்திடுமரக்கவுருவக்கணம்விடுப்பாய்

398 நாடிநவில்கின்றமறைநாலுமுகனன்னீ

ராடியிடினன்றியிவரக்கவுருவந்தான்

வீடலரிதாகுமுயர்மேதினியின்மீதோர்

கோடிசனனங்களவைகூடினும்விடாதே

399 இன்னதொருதீர்த்தமதிளின்னலமியம்பின்

முன்னுரிமைசேருமுகமுற்றுமதினின்றாம்

பின்னுறுமுகத்தில்வருபெற்றியினுமின்றா

மன்னதனின்மூழ்கினெவரும்மதிகராவர்

400 ஆதலினரும்பவமகன்றிடுமதன்க

ணீதகைமையோடமர்திநீடுகதிகூடும்

பூதலமெலாம்பரவுபுட்பவனமேமுன்

னோதுபலநற்பதியினுத்தமமதாகும்

401 பூர்வமதின்மேவிவளர்பூவணமதன்கட்

டேர்வருமருட்குறிச்சேவையதனாலே

பார்மிசைபடர்ந்துவருபாவமவையாவும்

நேர்படுதலாவதொருநிமிடமதினீங்கும்

402 காசிநகரிற் செய்தகடுங்கொடியபாவம்

பூசுரர்தினம்பரவுபூவணமதிற்போ

மோசைதருபூவணமுஞற்றியிடுபாவ

மாசரியபூவணமதன்கணதுதீரும்

403 ஈதுசரதம்மெனவியம்பியருளாலே

போதுவமெனாவினிதினாசிகள்புகன்றே

நாதமுறுவீணைபயினாரதனலங்கூர்

கோதிறிருமாலதுவைகுண்டமதடைந்தான்

404 பொற்சுவருடுத்துலகுபூவணமமர்ந்த

தற்பரனொடுற்றபரைதன்னையடிபேணிப்

பற்பகலுமன்பொடுபணிந்தருளின்வாழ்ந்து

நற்பரமமுத்திதிரணாசனனடைந்தான்

405 காதன்மிகுபிரமகைவர்த்தம்தினொன்று

போதவெழுபமூதெனப்புகலத்தியாயத்

தோதுமிக்காதைசவுநகவுணர்தியென்றான்

சூதனெனும்பேர்பரவுதொல்லுணர்வின்மேலோன்

வேறு

406 மருவுமிந்தநன்மந்தணமானதோர்மிகழ்பெருங்கதைவன்பவமானகா

னெரிபொருந்திடுமென்பர்கண்மேலையோரிணையிகந்துறுமிங்கிதன்மேன்மைதான்

பரவுகின்றவர்கள்பண்கொடுபாடினோர்பகரிரும்பொருடந்துசொல்பான்மையோர்

திரமுடன்செவிகொண்டிதுதேர்குவோர்சிவபெரும்பதிசேர்வதுதிண்ணமே

திரணாசனன்முத்திபெற்றசருக்கமுற்றியது

ஆகச்செய்யுள் 406

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book