11

62 பங்கயன்முகுந்தன் பாகசாதனனே பரவருமிருடிகளுரகர்

புங்கவர்யாரும்புடைபரந்தீண்டிப் போற்றியே நாத்தழும்பேறத்

தங்குறையிரந்து தலைத்தலை சார்ந்து சந்ததமிடைதரத் தயங்குந்

திங்களங்கண்ணி மிலைச்சியசடிலசேகரன் றிருக்கயிலாயம்

63 மன்னியசென்னிவானுறநிமிர்ந்துமருவிய கொடுமுடிபலவா

யுன்னத நூறாயிரமியோசனை யாயுரைக்கு மவ்வளவைகீழுடைத்தாய்ப்

பன்னருமகலப் பான்மையுமமூதாயப்பயின்று சூழ்படரிருவிசும்பிற்

றுன்னுபொன்மணிகள் சுடர்விடநிவக்குந் தொல்கயிலாயநீள்சிலம்பு

64 மகரகேதனனைமருவு போனகமாய்வாரியுண்கண்ர்தற்பெருமான்

றகுமுலகனைத் துஞ்சார்ந்துயிர்க்குயிராந்தம்பிரானானவெம்பிரான்சேர்

ககனகூடத்தின் முகட்டினுஞ்சென்று கனகமாமணிவெயில்பரப்புஞ்

சிகரகோபுரங்கள் சேண்டிகழ்ந்தோங்குந் திருக்கைலாயநீள்பொருப்பு

65 பிரமன்மான்முதலோர் பெயர்ந்திடவெழுந்தபிரளயத்தினும்புடைபெயரா

துரியவானந்த வுருவமாயோங்குமுண்மையாயசலமாயொன்றாக்

கருதருமுயிர்க்குக்களை கணாய்க் கதியாங்கண்ர்தலண்ணலெஞ்ஞான்றும்

பரிவின்வீற்றிருக்கும் பதியதாய் மேலாய்ப் பயில்வதுகயிலையஞ்சயிலம்

66 வெங்கதிரவனுமீதுநண்ர்றலால் வெண்சுடராயினனென்றா

லங்கண்மாஞாலத்தாருயிர்புனிதமாவதையறைதல்வேண்டின்றே

துங்கமேவியநற்சவுநகமுனிவசொல்லுதிநன்குநீதுணிவாற்

செங்கண்மால்விடையான்றிருவருளுருவாய்த்திகழ்வதுகயிலையாமெனவே

67 அன்றியும் வெய்யோனணைதருகாலையலர்தருமருணமண்டலம்போய்த்

துன்றியகிரணமேற்படவந்தச்சுவேதவண்ணந்துதைந்ததனா

லொன்றியவுணர்வினும்பர்தாங்கீழ்வந்து ற்றிடினவ்வியல்பாவ

ரென்றமூதுணர்த்திநின்றதும்போலாமெழிறிகழ்கயிலை மால்வரையே

68 சந்திரன்றிகழுஞ்சடிலசேகரமுந்தடக்கை கணான்குமரன் மழுவுஞ்

சுந்தரப்பிரம்புஞ்சுரிகையுநுதலிற் றுலங்கியகண்ர்ம் வெண்ணீறு

மந்தவான் மடவார்கண்டமங்கலநாணறாது றவாலமுண்டிருண்ட

கந்தரனருளுநந்தியம்பெருமான் கைக்கொடு காப்பதக்கயிலை

வேறு

69 அடிமுடியறிதலின்றாகிநிற்றலான்

முடிவறமுகிழ்மதிமுடியிற் சேர்தலாற்

படர்புகழ்பரப்பியபால் வெண்ணீறணி

கடவுளை நிகர்ப்பது கயிலை மால்வரை

70 அரியயனமரர்களடிவந்தேத்தலா

லிருமையுமருளியே யென்றுமேவலாற்

பரனுமையொடுகலந்தருளும் பான்மையாற்

கரிமுகனனையது கயிலைமால்வரை

71 சுந்தரக்கண்ர்தறுலங்கிச் சேர்தலால்

வந்திடுஞ்சூருரமாற்றமேவலாற்

சந்ததங்குன்றமாய்த்தயங்குகாட்சியாற்

கந்தவேளனையதுகயிலைமால்வரை

72 உரியவானுறவளர்ந்தோங்கிநிற்றலால்

வரியளிமுரன்றபூமடந்தைமேவலா

லரியநான்மறைவிரித்தருளுநீர்மையாற்

கரியமாலனையது கயிலைமால்வரை

73 தோற்றியே நிற்றலாற் சுருதிபோற்றலா

னாற்றிசைமுகங்களுநண்ர்மாண்பினாற்

போற்றுநற்கலைமகள்பொருந்தலாற் புழற்

காற்சரோருகனிகர்கயிலைமால்வரை

74 தினமிகு செல்வங்கடிளைக்குஞ் செய்கையால்

வனமுறுநெடியமான்மருவுமாண்பினாற்

றனைநிகர்தாமரைத்தாளின்மன்னுகோ

கனதையைநிகர்ப்பது கயிலை மால்வரை

75 அலரும்வெண்டாமரையணைந்தபொற்பினாற்

பலகலையாகமம் பன்னும் பான்மையா

னலமிகுநான்முகனண்ணலாற்செழுங்

கலைமகளனையதுகயிலை மால்வரை

76 எண்டிசாமுகங்களுமிருளைத்தள்ளியே

பண்புறுபாலொளிபரப்புகின்றது

கண்களாலளப்பருங்கவின் கொண்டோங்கிய

வெண்படாம்போர்த்ததாம் வெள்ளியங்கிரி

77 எள்ளதரிதாயபேரின்பமீந்திடுங்

கள்ளவிழ்கடுக்கைநற்கண்ணியஞ்சடை

வள்ளனாடோறுமேல்வதிந்துதோன்றலால்

வெள்ளைமால்விடைநிகர்வெள்ளியங்கிரி

78 நாற்றிசையெங்கர்நன்னிலாத்திர

டோற்றமோடெழுந்துவான்றுருவச்செல்வது

பாற்கடறிரண்டுருப்படைத்துவிண்டொட

மேற்கிளர்ந்தனையது வெள்ளியங்கிரி

79 ஒழுகியநிலாவுலகுந்தியங்கியாற்

சுழுமுனைதிறந்துநற்றுவாதசாந்தத்திற்

பொழிதருமமுதமேபொங்கியெங்கர்ம்

விழுவதுபோன்றது வெள்ளியங்கிரி

80 நிரந்தரமெங்கர்நீடுபேரொளி

கரந்துயிர்க்குயிருமாய்க்கலந்து மேவிய

பரஞ்சுடர்திருவுருக் கொண்டபண்புமேல்

விரிந்தது போன்றது வெள்ளியங்கிரி

81 எண்ணருமகலிருள்விசும்பினெங்கர்ந்

தண்ணருடவழநன்னிலாத்தழைப்பது

கண்ணருமமுதத்தைக் ககனங்கான்றிடும்

வெண்ணிலாத்தாரை நேர் வெள்ளியங்கிரி

82 திக்குடன் விதிக்கெனுந்திசைகளெட்டினு

மிக்குயர்முடியினும் வேறிடத்தினுந்

தக்கநற்கழைசொரிதரளமின்னுதன்

மிக்கதாரகைநிகர்வெள்ளியங்கிரி

83 கண்ர்தலண்ணலைக்காலைமாலையி

னண்ணியே வானவர் நாளும் போற்றிடப்

பண்ர் கண்ணேணி போற்பாரினின்று நீள்

விண்ணிலவுதலுறும் வெள்ளியங்கிரி

84 துந்துபியோசையுந்தூயநான்மறை

நந்தியதும்புருநாரதாதியர்

கந்தருவத்தவர்கானவோசையும்

விந்துநாதத்தருமிக்கவோசையும்

85 எண்ணரிதாயபாரிடங்களோசையுங்

கண்ணருநந்திமுன்கணங்களோசையும்

விண்ணவரோசையும் வேதவோசையும்

பண்ணவரோசையும் பயிலுமெங்கர்ம்

86 காமரமருச்சுநங்காகதுண்டநீள்

பூமிகுகுங்குமம் புன்னைவன்னிபொற்

றேமருவேலநற்றிகிரிகூவிள

மாமலகங்கடம்பாரமாதுளம்

87 வண்பலவரம்பைமாவகுளந்தாடிமம்

பிண்டிமந்தாரமாம்பிரநற்பிப்பிலஞ்

சண்பகந்தமரநீள்சாலஞ்சந்தனம்

விண்டிகழ்பராரைமாமரங்கண்மேவுமால்

88 பொற்புறுமணிமுடிப்புரந்தராதியர்

செற்றலுநந்திதன்செங்கை தாங்கிய

நற்பிரம்படிபடநண்ர்மாரங்க

ளற்றுதிர்குப்பைகளளப்பிலாதன

89 விரவியமாதவர் வேள்வித்தூமமுஞ்

சுரர்மடவார்கடஞ்சுரியற் சூட்டிய

பொருவருகற்பகப்பூவுமேவிய

பரிமளந்திசைதொறும் பரந்துநாறுமால்

90 காழிருங்கூந்தல் சேர் கௌரிநாயகன்

வாழிருங்கயிலைமால்வரையை மானவே

சூழிருங்கடற்புவிதுதிக்கநீண்டிடு

மேழிருபுவனத்து மெங்குமில்லையே

வேறு

91 அந்தநன்கயிலைதன்னிலன் புள்ளவரியயனமரர்களவுணர்

சந்திராதித்தர் கின்னரர்வசுக்கள் சாரணரெண்டிசாமுகத்தர்

கந்தருவத்தர் காரிமாகாளிகருடர் வித்தியாதரர்சித்தர்

முந்துறுநிகமாகமமுணர்முனிவர்முறை முறை தொழுதுநின்றேத்த

வேறு

92 சென்னிவான்றொடுசெம்பொற்கடிமதி

றுன்னுமோர் செஞ்சுடர் மணிமண்டபந்

தன்னனல்லரியாசனத்திற்றக

மின்னுவேற்கந்தன் வீற்றிருந்தானரோ

93 அந்தவேலையிலாறுமுகங்கொளுங்

கந்தவேளிருகஞ்சமலர்ப்பதம்

வந்தியாநன்மறைமுறைவாழ்த்தியே

நந்திகேசனவிலுதன்மேயினான்

94 ஈறுறாதநலெண்ணில்சிவாலயங்

கூறுகின்றதிற்கோதிலறம்பொருள்

வீறுசேரின்பவீடருளுந்தல

மாறுமாமுகத்தண்ணலருளென்றான்

95 என்றகாலையெழின்மிகுகந்தவே

ணன்றுநன்றெனநந்தியை நோக்குறா

வொன்றுகாதலினுண்மைப் பொருட்கதை

மன்றகேளெனவாய் மலர்ந்தானரோ

96 கண்ர்தல் பெறவந்தருள் கந்தவேள்

விண்ணவர்க்குவிடை கொடுத்தேகியே

யெண்ர்தற்கருமின்பத்தலத்திருந்

தண்ணறன்னையகத்தினிருத்தியே

97 தனைநிகர்க்குமத்தார்வருளினாற்

புனிதமேவிய பூவணமான்மிய

நினையுமெந்தைநிகழ்த்த நிகழ்த்துகே

னனிமகிழ்ந்தருணந்தியந்தேவுகேள்

98 என்றுகந்தனிசைத்திடவந்நந்தி

தன்றனிச் சொல்சநற்குமரன் கொடே

வென்றிவேதவியாதற்குரைக்கவமூ

தன்றெனக்கவன் சொன்னதறைகுவேன்

99 ஈதுமுன்னரிசைந்தசோபானமென்

றோதுநீதிச்சவுநகற்கோதியே

காதலாலக்கதையைவிரித்துயர்

சூதமாமுனிசொல்லத் தொடங்கினான்

திருக்கைலாயச்சருக்க முற்றியது

ஆகச்செய்யுள் 99

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book