38

திருப்புகழ் பாடல் எண். 550

தனத்தான தத்தத் தனதானா

தனத்தான தத்தத் தனதானா

அறப்பாவை அத்தற் கருள்பாலா

அளித்தாது வெட்சித் திருமார்பா

குறப்பாவை அற்பிற் புணர்வோனே

குலத்தேவ வர்க்கப் பரிபாலா

மறப்பாத கத்துற் றுழல்வேனோ

மலர்த்தாள்வ ழுத்தக் க்ருபையீவாய்

சிறப்பான முத்திக் கொருவாழ்வே

திருப்பூவ ணத்திற் பெருமாளே

திருப்புகழ் பாடல் எண். 551

தானனதான தானனதான தானனதான தனதான

வானவராதி யோர்சிறைமேவ மாவலியேசெய் திடுசூரன்

மார்பிருகூற தாய்விடவாரி வாய்விடவேலை விடுதீரா

கானவர்பாவை காதலனான காசணிபார தனமார்பா

காலனைமோது காலகபால காளகளேசர் தருபாலா

தேனமர்நீப மாலைவிடாத சேவகஞான முதல்வோனே

தீயகுணாதி பாவிநினாது சேவடிகாண அருள்வாயே

போனகசாலை யாதுலர்வாழ வீதிகடோறும் நனிமேவு

பூவணமான மாநகர்வாழு நாதகுகேச பெருமாளே

(காளகளேசர் ழூ விசத்தைக் கண்டத்திலுடையவர்

போனகம் ழூ அன்னம்)

திருப்புகழ் பாடல் எண். 552

தந்தத்தத் தானன தானன

தந்தத்தத் தானன தானன

தந்தத்தத் தானன தானன தனதானா

பந்தப்பொற் பாரப யோதர

முந்தச்சிற் றாடைசெய் மேகலை

பண்புற்றுத் தாளொடு வீசிய துகிலோடே

பண்டைச்சிற் சேறியில் வீதியில்

கண்டிச்சித் தாரொடு மேவிடு

பங்குக்கைக் காசுகொள் வேசையர் பனிநீர்தோய்

கொந்துச்சிப் பூவணி தோகையர்

கந்தக்கைத் தாமரை யாலடி

கும்பிட்டுப் பாடிசை வீணையர் அநுராகங்

கொண்டுற்றுப் பாயலின் மூழ்கிய

சண்டிச்சிச் சீயென வாழ்துயர்

குன்றப்பொற் பாதக்ரு பாநிதி அருள்வாயே

அந்தத்துக் காதியு மாகியு

மந்திக்குட் டானவ னானவ

னண்டத்தப் பாலுற மாமணி ஒளிவீசும்

அங்கத்தைப் பாவைசெய் தேயுயர்

சங்கத்திற் றேர்தமி ழோதிட

அண்டிக்கிட் டார்கழு வேறினர் ஒருகோடி

சந்தத்திக் காளுநி சாசரர்

வெந்துட்கத் தூளிப டாமெழ

சண்டைச்சொற் றார்பட வேவயில் விடுவோனே

தங்கச்சக் ராயுதர் வானவர்

வந்திக்கப் பேரரு ளேதிகழ்

தம்பப்பொற் பூவண மேவிய பெருமாளே

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book