34

பத்தொன்பதவது

திருவிழாச்சருக்கம்

1330 எனநற்புராணமுனிசொற்றலோடுமெழுதாமறைச்சவுனகன்

புனிதந்தயங்குபுகழ்தங்குகங்கைபொதிசெஞ்சடைச்சங்கரன்

றினமன்புகூரமகிழுற்சவங்கொடிருநாள்புகுந்ததனைநீ

துணிநந்தவோதுகெனஞானநீடுதொழின்மேவுசூதன்மொழிவான்

1331 வேதாகமத்தின்விதியோதுகீர்த்திவீசும்வைகாசிரவியிற்

பாதாளவீசன்மகிழ்வோங்குபூர்வபக்கங்கொள்பக்கமதனி

னோதாளியத்தினோரேழ்தினத்தினுறுவேதபாரகர்தமாற்

கோதேதுமில்லதொருகோவிலங்குகொடியேற்றுவித்தனனரோ

1332 பகர்பல்லியங்களுடனீள்பதாகைபணியொன்றுமல்குன்மடவார்

விகிர்தங்கொள்சோதிமணிகொண்டிறைத்தமிகுமாடவீதியிடைநீண்

மகரந்தயங்குமணிதோரணங்கண்மணிவாயிறோறும்வதியச்

சிகரங்கொள்செம்பொன்மணிநின்றிலங்குதேரூர்விழாக்கண்டனன்

1333 ஒருகோடிசெம்பொனவைநல்கிநீடுமுலகெங்குமோங்குதிருநாட்

டிருநாளுநின்றுநடமாடுகின்றதென்பூவணத்தினிடைகண்

டருண்மேவுதீர்த்தவிழவும்விருப்பினணிசேர்தரக்கண்டனன்

பரராசர்செம்பொன்முடியாற்சிவந்தபாதாரவிந்தநளனே

வேறு

1334 கலைக்கடல்கடந்தனர்கரைகண்டோதமால்

விலக்கரும்வேதநூல்வேள்வியாற்றிநல்

லிலக்கணவிழாவணியெடுத்தலானளன்

றொலைக்கருங்கலியெலாந்தொலைக்கின்றானரோ

1335 மற்றையநளனெனுமன்னர்தம்பிரா

னுற்றவெம்பிரான்றனையுவந்துதாழ்ந்தெழீஇ

வெற்றிசேர்படையொடும்விடைகொண்டேயுயர்

பொற்சுவருடுத்ததன்புரியிற்போந்தனன்

1336 அந்தநல்விழாவணியடைந்துகண்டுளோர்

பந்தவெம்பவமெலாம்பற்றறுத்துநற்

கந்தமேகமழ்செழுங்கமலபீடிகைச்

செந்திருவளத்தினிற்றிளைக்கின்றாரரோ

1337 வருந்தியேயாயினுமாக்கள்பாதலப்

பரன்றிருத்தேர்விழாப்பணிதல்வேண்டுமாற்

றிருந்தொருதினந்தரிசித்துளோர்களும்

பொருந்துவரழிவிலாப்போகமுத்தியே

1338 அந்திவண்ணத்தனையண்ணலங்கைவேற்

கந்தவேணந்திதன்கணங்கடம்மொடுஞ்

சந்ததம்பல்லுயிர்தழைப்பநாடொறும்

புந்தியிற்பூணவம்போற்றல்காண்டிநீ

1339 உத்தமமாநவதீர்த்தத்துண்மையு

மித்தலப்பெருமையுமெடுத்தியம்பொணா

தத்துணையெனினுநெஞ்சமைகிலாமையாற்

சுந்ததநற்சவுனகதொகுத்ததுச்சொல்லுகேன்

1340 அவிழ்ந்திடுமபுத்திபூருவமதாய்ச்செயும்

பவங்களிப்பூவணப்பதியைக்கண்ர்றிற்

றவிர்ந்திடும்புத்திபூருவத்திற்சார்பவ

முவந்தொருமதியுறிலொழியுமாலரோ

1341 சந்தநான்மறையவர்தம்மைநிந்தைசெய்

பந்தபாதகமெலாம்பாறல்செய்திடு

மெந்தையெம்பிராட்டிபாலியைந்திலங்கிடு

மந்தநற்பதியரையாண்டுமேவினால்

1342 பூரணைதனின்மணிபொருந்துமோடையி

லாரருளுடன்படிந்தண்ணல்சென்னிமேல்

வாரிசந்தயங்குபூமாலைசாத்தினர்

நேர்குவரத்தினநினைந்தயாவுமே

1343 மேவுபூரணையுறுவிசாகத்தோங்குதென்

பூவணத்திறைக்குநற்பூம்பட்டீகுநர்

பாவமானவையெலாம்பற்றறுத்தரோ

தாவில்சந்ததியுடன்றரணிதாங்குவார்

1344 அன்றியேகயிலையினணைந்தநந்தநாள்

வென்றியினவமணிவிமானத்தேறியே

துன்றுபூம்பொழிறொறுஞ்சுவேச்சையாலுறீஇச்

சென்றரனுடன்சிவபுரியிற்சேர்குவார்

1345 செப்புமுத்தராயணந்தெக்கிணாயனந்

தப்பிலாவிடுக்களிற்சார்ந்தமாகத்தி

னொப்பருங்கலைகளோதாதநாட்களி

னப்பெருஞ்சுடர்களையரவந்தீண்டுநாள்

1346 இந்தநற்றீர்த்தங்களினிதினாடியே

யந்தணரங்கையினரியதானங்கள்

சிந்தையின்மகிழ்ந்தினிதீகுவோர்கடாம்

வெந்துயர்ப்பவங்களைவேரறுத்தரோ

1347 அன்னநல்லணிகலமாரருந்துகின்

மின்னிடைமாதரார்வீணைநன்மணம்

பன்னுகாய்நூறடைபஞ்சுப்பாயலே

யென்னுமிப்போகமோரெட்டுமேய்வரால்

1348 இந்தநற்பிரமகைவர்த்தத்தீங்கிதை

நந்திமுன்சனற்குமாரற்குநன்கருள்

பந்திசேர்கின்றவெண்பானொர்நான்கதா

மந்தவத்தியாயத்தினருளிற்காண்டியால்

வேறு

1349 சந்திவந்தனைதந்தமாதலஞ்சங்கரன்புகழ்தங்குமாலயஞ்

சுந்தரந்திகழ்கின்றபூசனைதுன்றுமன்பர்தொடங்குமாமட

மிந்தவண்கதைபண்பினோதுநான்புடன்செவிகொண்டுதேர்குநர்

சிந்தைவெந்துயரங்கடீர்குவர்செம்பொனம்பதிசென்றுசேர்வரே

திருவிழாச்சருக்கமுற்றியது

ஆகச்செய்யுள் 1349

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book