32

பதினேழாவது

தீர்த்தச்சருக்கம்

1272 மறைநான்குமனங்கிடந்தவழுவிலருட்சவுனகவன்னக்கலாபப்

பொறிமயினின்றனவரதநடனமிடும்பொழிறிகழும் பூவணத்தி

னறைதருதீர்த்தங்கடமிலரும்பவநீங்கிடவாடுமான்மியத்தின்

முறைமைதனைமூவாறுபுராணமுனியுரைப்பனெனமொழிவதானான்

1273 சீரார்ந்தகார்த்திகைநற்றிங்களுறுந்தினந்தன்னிற்சேர்முன்வாரத்

தோராழித்தேர்வெய்யோனுதிப்பதன்முன்மணிகுண்டத்துந்தித்தான்

நேராகநின்றவன்மந்திரநவிற்றிமூழ்குநர்தாநினைந்ததேய்ந்து

பேராதபெரும்பவநோய்பெயர்ந்ததன்பின்சிவலோகம்பெறுவரன்றே

1274 வனசமலர்மாளிகையின்வண்டிருந்தின்னிசைபாடும்வண்டானஞ்சேர்

தனைநிகரத்தடம்படிந்துதருங்கிருதமறையவர்க்குத்தானஞ் செய்வோர்

நினைவுதருநெஞ்சாலுநினைப்பருங்குன்மாதிவெந்நோய்நீங்கிவான்றோய்

கனைகதிராயிரம்பரப்புகனலிதனதுலகத்திற்கலந்துவாழ்வார்

1275 இரவிமணித்தேர்பூண்டவேழ்புரவியுததிநடுவேறும்வேலை

மருவியவத்தீர்த்தத்தின்மார்கழித்திங்கட்டிங்கண்மாதினோடு

மொருமையுடன்படிந்தாடுமுத்தமர்நற்புத்திரர்ப்பெற்றுவந்துவாழ்வார்

பரவுசிவமந்திரத்தைப் பன்னிமுன்னாட்படியிலரன்பதியிற்சேர்வார்

1276 உறைதருமத்திங்கடனிலொண்கலைசேர்பூரணையினோரைதன்னின்

மருவியவன்புடன்பிரமதாண்டவர்மாபூசைசெய்வோர்மகேசலோகத்

தொருபிரமகற்பமுறைந்துகாந்தத்தினுருத்திரனோடுற்றுப்பின்றைக்

குருமணிநல்விமானமேல்கொண்டுசிவலோகமதிற்குடியாய்வாழ்வார்

1277 பங்கமில்சீர்தருமாகத்திங்கடனில்விசேடித்தெண்டிசைபரப்பும்

பொருங்குகதிரோனுதயப்பொருப்பினிலேழ்பசும்பரித்தேர்பூட்டும்வேலை

யங்கவன்மந்திரநவிற்றியரன்றிருமுன்னருத்தியினோடாடுமாந்தர்

துங்கமுடன்பவமொழிந்துசுந்தமாயத்துவிதமுத்திசேர்வார்

1278 மைக்கிடமாங்கடன்முகட்டின்மான்றேரில்வாளிரவிதோறான்முன்சீர்

மிக்கசிவநிசியினந்தவேகவதிதனின்மூழ்கிவிழிதுஞ்சாது

நக்கனைநான்கியாமத்துநன்கருச்சித்தருந்தானநயந்தீவோரெண்

டிக்குபாலகர்பூசைதினம்புரியச்சிவபுரியிற்சேர்ந்துவாழ்வார்

1279 இப்பரிசங்கமர்ந்துறையுமெல்லையினெம்மீசனருளிருந்தவாறோ

மைப்படியுந்திருநயனவல்லிதவம்புரிதலத்தின்வண்மையேயோ

வொப்பரியநவமணிசேருயர்விமானம்தேறியும்பர்சூழச்

செப்பரியவுலகமெலாந்திசைவிசயஞ்செய்தின்பந்திளைத்துவாழ்வார்

1280 மானவுயரிடபரவிதன்னின்மணிகன்னிகைவைசாகமாக

நானமதுபண்ணினர்கணவில்பலதானப்பலமுநண்ணிவாழ்வா

ரானவமுதோதகமாமத்தீர்த்தத்துற்றதக்கிணாயனத்திற்

பானுமதிதனையரவம்பற்றிடுநாண்மூழ்கினரப்பலத்தைச்சேர்வார்

1281 கொடுமறலிதனையிடறுங்குரைகழற்காங்கவனுயிரைக்கொள்ளையீந்த

கடுவடக்குங்கந்தரத்தெங்கண்ர்தலோன்றிருமுனிருகணையோமெல்லை

நடுவறுநன்மாதவத்துவசிட்ட முனிவன்கண்டவசிட்டதீர்த்தம்

படிபவர்பண்பாடியறுபதந்துவைக்கும்பங்கயன்றன்பதத்தைச்சேர்வார்

1282 கனைகதிரோன்கடன்முகட்டேழ்கடும்பரிபூண்டிடுமான்றேர்கடாவும்வேலைத்

தினம்பொருபோர்களத்தசுரர்செங்குருதிமுடைநாறும்வச்சிரத்தான்

மனமகிழ்விற்றருகிருதமாலைமேலணிந்திலங்குமிந்த்ரதீர்த்தந்

தனிலுயர்பங்குனிதருமுத்தரமாடினோர்யாகபலத்தைச்சார்வார்

1283 பார்புகழீராறுதினம்படிந்தாடிற்சாகமகப்பலன்படைப்பார்

சோர்வறநற்றிங்களுவந்தாடினரச்சுவமேதபலத்தைத்துய்ப்பா

ரோர்கரநீரருந்தினரக்கினிட்டோமபலந்தன்னையுறுவர்நாளும்

பேர்பெறும்யாகாதிகன்மம்பேணாதபலன்மூழ்கிற்பெறுவரன்றே

1284 பூரணையிற்கலையொடுங்குங்குவதனிற்சங்கிரமந்தன்னிலிந்து

வாரமதினெடுத்துரைத்தமாதீர்த்தந்தொறுமூழ்குமாந்தரேய்ந்த

வார்கலிசூழுலகத்திலன்னையர்தம்முதரத்திலர்காரம்ம

வோரினவருமாபதிதனுருவமடைந்திடுவரிமூதுண்மையாமால்

1285 மிக்கவறம்பொருளின்பம்வீடருள்வதாய்மேலாய்விமலமாகித்

தொக்கவரும்புண்ணியமாய்த்தொல்பதியாய்ப்பிதிர்கள்பவந்துடைப்பதாகித்

தக்கனருடவக்கொடிநற்றகுந்திருமால்சதுர்முகன்செங்கதிர்மார்க்கண்டன்

றிக்குலகம்வழிபடுமத்திருநகர்சேர்குநர்க்கரிதுசெப்பினின்றாய்

1286 நவின்றிடுவர்ணாச்சிரமநன்கடைவுபெறநாளுநாடியுள்ள

முவந்துபுரிகுற்றனரேலுரைக்கரிய பரமசிவனுருவமாவார்

தவந்தருமித்தலந்தன்னிற்றகுமிடையூறமூதடையாவகைகணேசன்

சிவந்தமுருகன்வடுகனிவர்பூசைசெய்யினிகறீர்ந்துவாழ்வார்

1287 புகலரியகேதாரமலைகாசிமாகாளம்புட்கரஞ்சீர்

திகழ்கமலாலயந்தில்லைவனந்தீதில்வேதவனந்திருவெண்காடு

மகிழ்தருதென்மதுரைதனின்மருவுகதியைப்பெறுவான்வைகுவோர்சேர்

மிகுபலமானவையனைத்துமேவுவர்பூவணநகரின்மேவுவோரே

1288 ஆதலினித்தலமெல்லாமத்தலங்கட்கதிகமெனவறையுமிந்தக்

காதைபுகழ்தருபிரமகைவர்த்தத்திரண்டுதலையிட்டவென்ப

தோதிடுமத்தியாயத்தினோர்ந்திடுகசவுனகவென்றுரைத்தான்மிக்க

மூதுணர்வின்மேதகுநல்வியாதனருண்மாணாக்கமுனிவர்கோமான்

வேறு

1289 ஆரிரும்பவமாற்றியவாக்கினாலாரணந்​தெளிவுற்றிடுமந்தணீர்

சேருநன்பலதீர்த்தவிசேடமாஞ்சீர்தருங்கதைசெப்பிடுஞ்செஞ்சொலோ

ரோர்வுறும்படியோதியமேன்மையோரோர்ந்துசிந்தைகொளுத்திடுமன்பினோர்

பார்புரந்தருள்பார்த்திவராகியேபரவரும்பரமுத்திபொருந்துவார்

தீர்த்தச்சருக்கமுற்றியது

ஆகச்செய்யுள் 1289

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book