15

228

செங்கதிர்வெய்யோன்பூசைசெய்தவாறுந் திகழ்திரணாசனன்வீடுசேர்ந்தவாறும்

பொங்குமணிகன்னிகைநீர்பொருந்துமாறும்புகலருந்துன்மனன்கதியிற்புக்கவாறுந்

தங்குதருமஞ்ஞன் முத்திசார்ந்தவாறுந் தன்னிகருற்பலாங்கிபதிசார்ந்தவாறும்

பங்கமில்பாற்கரபுரப்பேர்படைத்தவாறும் பன்னுமெலாப்பவங்களையும்பாற்றுமாறும்

229

செங்கமலன்சாபமுற்றுந்தணந்தவாறுந் திருமகடன்சாபந்தான்றீர்ந்தவாறு

மங்கையவதாரஞ்செய்தமர்ந்தவாறும்வார்சடையோனவளைமணம்புணர்ந்தவாறுந்

தங்கியதக்கன்வேள்விதகர்த்தவாறுஞ் சங்கரிபூவணத்தில்வந்தவாறுந்தீர்த்தங்

கொங்கணிசுச்சோதிதானாடுமாறுங் கோதில்பிதிர்களைமுத்திசேர்த்தவாறும்

230

அருளுடனே தீர்த்தங்களாடுமாறுமருங்கலியின்வலியை நளனகற்றுமாறுந்

திருவிழாவணிபெறச்செய்வித்தவாறுஞ் சிதம்பரநல்லுபதேசஞ்செய்தவாறுந்

தருமுலகிற்சகாத்தமாயிரத்தைஞ்ஞூறு தங்குநாற்பான்மூன்றுதந்தவாண்டிற்

பொருவருநற்புலவோர் சொற்புலமைகாட்டப் புட்பவனபுராணமெனப் புகலலுற்றேன்

பாயிரமுற்றியது

ஆகச் செய்யுள் 230

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book